அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு குறித்து மஹிந்த அணிக்கு அச்சம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் நாம் போட்டியிடுவோம். வடக்கு,கிழக்கு பகுதிகளில் எல்லாம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை.

தற்போதைய நிலைவரப்படி ஏனைய சபைகளில் ஐந்து சபைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கும். எமது தலைமையிலான கூட்டணியே மாகாணசபைத் தேர்தலில்வெற்றிபெறும்.”- என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை