தொழிலாளர் கட்சித் தலைமை போட்டியில் இருந்து விலகினார் டேரன் ஜோன்ஸ்
டேரன் ஜோன்ஸ் தொழிலாளர் கட்சித் தலைமைக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு உள்ளபோதிலும் வரவு செலவு திட்டத்தை தயாரிக்கக் கிடைக்கும் நேரம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
டேரன் ஜோன்ஸின் இந்த தீர்மானம் ஆண்டி பர்ன்ஹாம் இலகுவாக பிரதமராவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.
இதற்கிடேயே சர் கெய்ர் ஸ்டார்மரின் இராஜினாமாவால் கவலையடைந்த அல்லது மனமுடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது பொருளாதாரக் கொள்கைகள் குறித்த கூடுதல் விவரங்களை வழங்குமாறு ஜோன்ஸ் ஆண்டி பர்ன்ஹாமை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பர்ன்ஹாமின் சாத்தியமான அமைச்சரவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.





