காசா மற்றும் லெபனானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த மனக்கசப்பு சர்வதேச அளவில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. உலகம் செய்தி

டிரம்ப்-நெதன்யாகு உறவில் விரிசலா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இடையிலான உறவு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகம், இரு தலைவர்களுக்கும் இடையிலான பதட்டங்களை விவரிக்கிறது. செப்டம்பர் 2025-இல் ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தின் இடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப், நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தார். “எல்லோரும் உன்னால் சோர்வடைந்துவிட்டார்கள், யூதர்களும் […]

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

வரலாற்றில் முதன்முறையாக வரி விவரங்களை வெளியிட்ட பிரித்தானிய மன்னர்

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் தனது வரி விவரங்களை இந்த வழியில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். செலுத்தப்பட்ட வரியின் அளவை ஆராயும்போது, ​​இங்கிலாந்தில் அதிக வரி செலுத்துபவர்களில் மன்னர் சார்லஸும் ஒருவர். வேல்ஸ் இளவரசர் வில்லியம், அதே காலகட்டத்தில் 7.76 மில்லியன் பவுண்டுகள் வரி […]

கருத்து & பகுப்பாய்வு

அரச வரலாற்றில் 180 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றிய மன்னர் சார்லஸ்

  • June 26, 2026
  • 0 Comments

அடுத்த ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையின் விரிவான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், அதைத் தனது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக்கொள்ளப் போவதில்லை என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். மன்னரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு  வந்த அரச பாரம்பரியம் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பதிலாக மன்னர் சார்ல்ஸும்  ராணி கமிலாவும் பல ஆண்டுகளாகத் தாங்கள் வசித்து வந்த லண்டன் இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸிலேயே (Clarence House) தொடர்ந்து வசிப்பார்கள் […]

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இலங்கை செய்தி

ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து ராணுவம்

  • June 26, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார். ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எங்கு […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

  • June 26, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான மின்டானோவில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் (18 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தகவல் வெளியிட்டுள்ளது. மின்டானோவின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டாலும், உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாகவும்,  ஏதேனும் பின் அதிர்வுகள் ஏற்படுகிறதா […]

உலகம்

நியூசிலாந்தில் மின் துண்டிப்பு : 200 விமானங்கள் இரத்து

  • June 26, 2026
  • 0 Comments

நியூசிலாந்தை  இன்று கடுமையான புயல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் 4,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  வெலிங்டன் மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெலிங்டனுக்கு வடகிழக்கில் உள்ள லோயர் ஹட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. அதேநேரம் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை வீசியதாகவும், இரவு நேரத்தில் […]

இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!! நிர்மலா சீதாராமனின் துறை மாற்றப்படுமா?

  • June 26, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உயர் மட்டத்தில் பல மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துறைகளிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்படலாம். தர்மேந்திர பிரதான் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விலகக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. \சக்திகாந்த தாஸ், அனுராக் தாக்கூர், ஸ்ரீகாந்த் […]

ஐரோப்பா

ரஷ்யா மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய உக்ரைன்

  • June 26, 2026
  • 0 Comments

போர்முனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளைக் குறிவைத்து, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்ட புதிய தொடர் தொலைதூரத் தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள போல்டாவ்ஸ்கா எண்ணெய் கிடங்கும், உஃபா நகரில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட உஃபா நகரில் உள்ள பாஷ்நெஃப்ட்-உஃபானெஃப்டெகிம் மற்றும் பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையங்கள், தற்போதைய போர் முன்னணியிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. ரஷ்யப் பிரதேசத்தின் ஆழமான […]

உலகம்

இஸ்ரேலிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால் பரபரப்பு

  • June 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால், அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். இதன்போது, ​​திடீரென ஒரு பறவை அவரது ஹெலிகாப்டர் மீது மோதியது. பறவை மோதியதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் இஸ்ரேலிய ஜனாதிபதி மற்றொரு ஹெலிகாப்டரில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

  • June 26, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின் மனைவி கிம் கியுங்-யியோனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2022 முதல் 2025 வரை யூன் சுக்-யியோலின் அதிபர் பதவிக் காலத்தில், முதல் பெண்மணி என்ற தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 300 மில்லியன் வோனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை இலஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்க மேற்கொண்ட […]