உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான மின்டானோவில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் (18 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தகவல் வெளியிட்டுள்ளது.

மின்டானோவின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டாலும், உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாகவும்,  ஏதேனும் பின் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் டெக்டோனிக் தட்டுகளின் நகர்வு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி