பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான மின்டானோவில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் (18 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தகவல் வெளியிட்டுள்ளது.
மின்டானோவின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டாலும், உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாகவும், ஏதேனும் பின் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் டெக்டோனிக் தட்டுகளின் நகர்வு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.




