டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை செய்தி

இலங்கையில் 45 பேரின் உயிரை பலியெடுத்த டெங்கு

  • July 9, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 […]

உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில்  78 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஈரானின் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து நேற்று இரவு 90 இலக்குகளை அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Australia will export uranium to India under a new agreement signed today between Prime Minister Anthony Albanese and Indian Prime Minister Narendra Modi, as the leader of the world's most populous country continues his visit to Australia. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா இணக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ், “2015 இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்” […]

உலகம்

பாவிப் புயலின் நகர்வு : சீனா, தைவான், ஜப்பான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • July 9, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் உருவான பாவி புயல், தைவானை நோக்கிச் நகர்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைத் தாக்கக்கூடிய மிக வலிமையான புயலாக இது இருக்கலாம் என்பதால், வரக்கூடிய சீரற்ற வானிலைக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,000 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்தப் புயல், சனிக்கிழமை மாலை சீனாவின் கிழக்கு ஃபுஜியான் மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்பு, வடக்கு தைவானுக்கு […]

இலங்கை

சட்டவிரோத தங்கக் கடத்தல் – வசமாக சிக்கிய தொழிலதிபர் : 10 இலட்சம் அபராதம்

  • July 9, 2026
  • 0 Comments

சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கத்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 11.8 மில்லியன் பெறுமதியான தகங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளையைச் சேர்ந்த 53 வயது தொழிலதிபர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயில் இருந்து நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தப் பயணியை இடைமறித்து சோதனைகளை மேற்கொண்டனர். அவரது உடமைகளை […]

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

  • July 9, 2026
  • 0 Comments

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 9, 2026
  • 0 Comments

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் […]

இலங்கை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தாங்க முடியாத வெப்பம்

  • July 9, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

நேட்டோ செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது ஈரான் கடும் விசனம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte தெரிவித்த கருத்துக்களை ,ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய் […]

உலகம்

ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது : 90 இலக்குகளை அழித்த பிறகு ட்ரம்ப் கருத்து

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்ல தயாரான அவர், ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “அவர்கள் சற்று முன்பு அழைத்தார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார். நேற்று இரவு ஈரானில் 90-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் […]