புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ai image இலங்கை செய்தி

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் 8 பேர் கைது

  • June 24, 2026
  • 0 Comments

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வேனில் புதையல் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்காப்பட்டுண) சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக […]

எரிவாயு கசிவால் எரியத் தொடங்கிய தீ, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. இலங்கை செய்தி

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் தீ விபத்து

  • June 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது. நீண்டகாலமாகச் செயலற்றுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணி, தற்சமயம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகள் இன்று மாலையும் வழமை போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரின் எரிவாயுவில் ஏற்பட்ட […]

Israel’s Defence Minister Israel Katz said ‘200,000 residents will not return’ உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இருந்து படைகளை மீளப்பெறமாட்டோம்- இஸ்ரேல் திட்டவட்டம்

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா கோரிக்கை விடுத்தாலும் லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் Israel Katz , திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பாதுகாப்பு அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ராணுவப் பாதுகாப்பு மண்டலத்தை பராமரிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாது என்பதை அவரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. தனது […]

ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். இலங்கை செய்தி

தமிழக அமைச்சர் வன்னி அரசுடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு

  • June 24, 2026
  • 0 Comments

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சென்னையிலுள்ள சமூக நீதித்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். இதனையொட்டி, அவருக்குத் தனது […]

புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு மோடிக்கு ஈரான் அழைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது. கமேனியின் இறுதி ஊர்வலத்திற்கு சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு […]

இலங்கை

சுகாதார திணைக்கள மீளாய்வு கூட்டம்

  • June 24, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் இணைக்கப்பட்ட திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் மற்றும் மீளாய்வு தொடர்பில்லாத கலந்துரையாடல் (24) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதில், அமைச்சு மற்றும் அதன் இணைக்கப்பட்ட நிறுவனங்களான மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களம், மாகாண சமூக சேவைகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வளிமண்டலத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் சூரிய புயல்கள்

  • June 24, 2026
  • 0 Comments

சூரியப் புயல்கள் இன்னும் சில நாட்களுக்குள் பூமியின் வளிமண்டலத்தில் விரைவான மற்றும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என ’புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஜோக்கிம் ரேடரின் (Joachim Raeder) ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ (Geophysical Research Letters)  என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி சூரியன் தற்போது அதன் 11 ஆண்டு செயல்பாட்டுச் சுழற்சியின் உச்சத்தில் உள்ள உள்ளதாகவும், இது உலகளாவிய காலநிலை மற்றும் வானிலையைப் […]

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf உலகம் செய்தி

இஸ்லாமாபாத் ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்

  • June 24, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாகும் என்று ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf தெரிவித்தார். அஜர்பைஜானில் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இஸ்லாமாபாத் ஒப்பந்தம் எவ்வித அழுத்தத்தாலோ அல்லது கட்டாயத்தினாலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல, மாறாக வீரமிக்க ஈரானிய தேசத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே சாத்தியமானது.” எனவும் Mohammed Bagher Ghalibaf கூறியுள்ளார். சுதந்திர நாடுகள்மீது […]

இலங்கை

இலங்கையில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: நாடாளுமன்றில் சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கைப் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சமூக ஊடகங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு மசோதா’, சிறுவர்கள் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதுடன், சமூக ஊடக மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான புதிய விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட வரைவின்படி, இலங்கையில் செயல்படும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், […]

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். செய்தி

மீண்டெழுகிறது சுற்றுலாத்துறை – 1.1 மில்லியன் பயணிகள் இலங்கை வருகை

  • June 24, 2026
  • 0 Comments

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 281,418 பேரும், பிரித்தானியாவில் இருந்து 104,754 பேரும், ரஷ்யாவில் இருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த நாடுகளே முதல் மூன்று இடங்களில் உள்ளன. சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து, கனடா […]