யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்க புதிய யுக்தியை கையாளும் புலம்பெயர்ந்தோர் – மூவர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகத்திற்கு  அருகே அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்றைய தினம் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சீரான வானிலை காரணமாக நேற்றைய தினம் சுமார் 700 பேர் ஆங்கிலக் கால்வாயை கடந்திருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கின்றனர். புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகளில் ஏறுவதை பிரெஞ்சு காவல்துறையினர் கண்காணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது, ஆனால் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், படகுகள் தண்ணீரில் […]

ஐரோப்பா

வட்டி விகித அதிகரிப்பு தொடர்பில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தீர்மானம்

  • July 30, 2026
  • 0 Comments

பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்புகள் இருந்தபோதிலும், பேங்க் ஆஃப் இங்கிலாந்து (BoE) வட்டி விகிதங்களை 3.75  என்ற சதவீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது. பணவியல் கொள்கை குழு இன்று நடத்திய வாக்கெடுப்பில், 6-3 பேர் வட்டி விகிதங்களை பராமரிக்க வாக்களித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்  பிளவுபட்ட  இந்த  வாக்குகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உருவாகும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள், பணவீக்கத்தை மேலும் […]

உலகம்

ஜப்பானின் பூர்வீக குடிமக்களில் பாரிய வீழ்ச்சி – ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டினர்

  • July 30, 2026
  • 0 Comments

ஜப்பானில் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூர்வீக மக்கள் தொகை 120 மில்லியனுக்கும் குறைவாகக் குறைந்துள்ளதுடன் வெளிநாட்டினர் அதிகரித்துள்ளனர். உள்விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  நாட்டில் வசிக்கும் ஜப்பானியர்களின்  எண்ணிக்கை  119.74 மில்லியனாக காணப்படுகிறது.  இது தொடர்ச்சியாக 17வது ஆண்டாக ஏற்படும் வருடாந்திர சரிவைக் குறிக்கிறது. பதிவுகள் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை மற்றும் சதவீதம் ஆகிய இரண்டிலும் மிகக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இது குறிக்கிறது. (இவை ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கான கணிப்பு ஆகும்) […]

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமனம்

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது நீண்டகாலப் பயணத்தை இந்த மாதத் தொடக்கத்தில் முடித்துக் கொண்ட ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) செப்டம்பர் 2030 வரை நீடிக்கும் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான பிளெமிங், […]

இலங்கை

முடங்கிக்கிடக்கும் வீட்டுத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை – அமைச்சர்கள் ஆலோசனை

  • July 30, 2026
  • 0 Comments

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடு முழுவதும் சுமார் 5,000 வீட்டுவசதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை […]

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார். உலகம் செய்தி

“உலக அமைதிக்கு ஈரான் ஆபத்து என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்”

  • July 30, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான உலகளாவிய வர்த்தகம் தொடர்பான ஈரானின் நடவடிக்கைகளைக் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய உலகில் ஈரான் உலக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக விளங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிசக்திப் பாதைகள் வேறு வழிகளுக்கு மாற்றப்பட்டால், அந்த நீர்வழிப்பாதை தனது மூலோபாய ஆற்றலை (strategic power) இழந்துவிடும் என நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார். “ஹார்முஸ் நீரிணை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கோரத் தாண்டவம் – வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பிய போலந்து

  • July 30, 2026
  • 0 Comments

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று முன்னெடுத்த பாரிய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலின்போது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 280 ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை வரையிலும் கீவில் தாக்குதலுக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் இந்த கோரத் தாண்டவத்தை தொடர்ந்து போலந்தும் தங்களது வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை  பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளை சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, வரவிருக்கும் “ஒரு பெரிய தாக்குதல்” குறித்து  […]

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரானை மீண்டும் அமைதிப் பாதைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி

  • July 30, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும் கொண்டுவர நாங்கள் எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி (Tahir Andrabi) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் “தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தங்களது கடமைகளை இரு நாடுகளும் முழுமையாகப் […]

ஐரோப்பா

கிரேட்  மென்செஸ்டரில் புதிய மேயரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் – வாக்குப்பதிவுகள் ஆரம்பம்

  • July 30, 2026
  • 0 Comments

கிரேட்  மென்செஸ்டரில் (Greater Manchester) புதிய மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று  இடம்பெற்று வருகிறது. ஆண்டி  பர்னம் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்தபகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இடைத்தேர்தலாக  விவரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் 02 மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இரவு 10 மணிவரை வாக்குபதிவு இடம்பெறவுள்ளது. மென்செஸ்டர் நகர மன்றத்தின் தலைவரான, தொழிலாளர் கட்சியின் பெவ் கிரேக் (Bev Craig), பிரதமரின் விருப்பமான வேட்பாளராக உள்ளார்.  அவரை […]