உலகம்

போப் கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் போப் “கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். போப் லியோ கத்தோலிக்கத் திருச்சபை அனைத்து அணு ஆயுதங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போபின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய ட்ரம்ப்.  “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரிதான்” என்று போப் நம்புவதாக ட்ரம்ப் எந்த ஆதாரங்களையும் வழங்காமல் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே மார்க் ரூபியோ மற்றும் போபிற்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் […]

உலகம்

அரசியல் அமைப்பு திருத்தம் : அணுவாயுதங்கள் மீதான அதிகாரம் கிம் வசம்!

  • May 6, 2026
  • 0 Comments

வட கொரியா தனது அரசியலமைப்பைத் திருத்தியுள்ளது. இதன் மூலம், அதன் பிராந்தியத்தை வெளிப்படையாக வரையறுத்து, நாட்டின் அணு ஆயுதங்கள் மீதான அதிகாரத்தை தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு வழங்கியுள்ளது. பிரிவு 6-இல் உள்ள ஒரு புதிய உட்பிரிவு, அணு ஆயுதப் படைகள் மீதான கட்டளை அதிகாரம் தலைவருக்கே உரியது என்றும், அவர் அணு ஆயுதப் பயன்பாட்டு அதிகாரத்தைப் பிறருக்கு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த அரசியலமைப்பில், தென் கொரியாவுடன் மீண்டும் இணைவது குறித்த முந்தைய அனைத்துக் […]

ஐரோப்பா

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் மீது தாக்குதல்!

  • May 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக  பிரெஞ்சு கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎம்ஏ சான் அன்டோனியோ (CMA San Antonio) என்ற கப்பல் நேற்று அந்த ஜலசந்தியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “காயமடைந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றும்  கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.  

இலங்கை செய்தி

‘விஜய் இலங்கை வருவார்’ – நாடாளுமன்றத்தில் இன்று வெளியான தகவல்!

  • May 6, 2026
  • 0 Comments

“தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.” என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய உறவின் ஊடாக தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் கூறியவை வருமாறு , ” விஜயை இதுவரைகாலம் நடிகராக பார்த்த மக்கள் தற்போது தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் […]

இலங்கை

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

  • May 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட […]

உலகம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் பதற்றம் – போர்நிறுத்தம் சரியும் அபாயம்!

  • May 6, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்ற நிலை பலவீமான போர் நிறுத்தம் முழுமையாக சரிந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து, அரசியல் நிபுணர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போர் நிறுத்தம் ‘முடிவடையவில்லை’ என்று வலியுறுத்தினார். அதே நேரத்தில், ஜனாதிபதி  ட்ரம்ப் ஈரானின் நடவடிக்கைகளை ‘விளையாட்டுகள்’ என்று நிராகரித்ததோடு, நிலைமை […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: தெற்கு லெபனானில் கோரத் தாக்குதல்!

  • May 6, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்துக்குள் மாத்திரம் 25 இலக்குகள் தகர்க்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லெபனானின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ கட்டமைப்புகளுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார். லெபனான் தேசிய செய்தி நிறுவனம் […]

அரசியல் இலங்கை செய்தி

“மலையகத்துக்கு கூலிப்படை வேண்டாம்”: சபையில் மனோ காட்டம்

  • May 6, 2026
  • 0 Comments

‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பாகிஸ்தான் அவதானம்!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்: திமுக சீற்றம்!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பது என்ற காங்கிரஸின் முடிவு திமுகவின் முதுகில் குத்தும் செயல் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார். ‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.’ எனவும் அண்ணாதுரை சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸின் இந்த முடிவால் தேசிய மட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து […]