லார்ட் மாண்டல்சன் பதவி நீக்கத்துக்கு பின் உயர்மட்ட தூதுவர் திடீர் ராஜினாமா

  • May 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்காலத் தூதராகப் பணியாற்றிய உயர்மட்ட தூதுவர் ஜேம்ஸ் ரோஸ்கோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது விலகலுக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்த ரோஸ்கோ, மண்டேல்சனுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்தப் பொறுப்பு சர் கிறிஸ்டியன் டர்னருக்கு (Sir Christian […]

உலகம் செய்தி

தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஒரு புதிய போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf எச்சரித்துள்ளார். எனவே, தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ” எதிரிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் மோதலுக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” – எனவும் ஈரான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

கொங்கோ, உகாண்டாவில் எபோலா பாதிப்பு 600 ஆக உயர்வு

  • May 20, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் சந்தேகிக்கப்படும் எபோலா (Ebola) நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தற்போதும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக உள்ளதென ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரகாலக் குழு கூட்டத்தில், அதன் தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார் ஆனால், இது உலகளாவிய பெருந்தொற்று அவசரநிலையாக தற்போது கருதப்படவில்லை என்றும் அவர் […]

உலகம்

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் : தேர்தல் பயத்தில் நெதன்யாகு!

  • May 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதனால் அடுத்ததாக பொதுத் தேர்தல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கான பூர்வாங்க வாக்கெடுப்பு ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேறியுள்ள நிலையில், ஒப்புதல் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7 […]

உலகம் செய்தி

கப்பல் குழு ஆர்வலர்கள் கைது -இஸ்ரேல் அமைச்சர் பகிர்ந்த காணொளி உலகளவில் அதிர்ச்சி

  • May 20, 2026
  • 0 Comments

காசாவுக்கான கப்பல் குழுவைச் சேர்ந்த கைதான ஆர்வலர்கள் தொடர்பான ஒரு காணொளியை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில், ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “இஸ்ரேலுக்கு வரவேற்கிறோம்” என்ற தலைப்புடன் அந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு இராணுவக் கப்பலின் மேல்தளத்தில் டஜன் கணக்கான ஆர்வலர்கள் இருப்பது மற்றும் இஸ்ரேலிய தேசிய கீதம் ஒலிக்கப்படுவது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. அப்போது அமைச்சர் […]

ஆஸ்திரேலியா செய்தி

“மேற்காசிய போர்” – ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஆஸ்திரேலியா அதிருப்தி!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேற்காசியா போர் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிவருவதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese  சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையானது உலகிற்கும் மிகவும் கடினமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இரு நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். பின்னர் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டது என அறிவித்தார். இன்று காலை நாம் விழித்தபோது , பரிசீலிக்கப்படுகின்றது என அறிவிப்பு […]

உலகம்

டிப்தீரியா நோய் பரவலால் திண்டாடும் ஆஸ்திரேலியா! 200இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் டிப்தீரியா (diphtheria) நோய் பரவலால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், குயின்ஸிலாந்திலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி விகிதங்களில் ஏற்பட்ட சரிவே இந்த நோய் பரவல் மீள் எழுச்சிக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பதிவான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால், தடுப்பூசி போடும் முறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதேவேளை […]

உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஈரானுக்கு அழைப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது. எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது. உலகளாவிய ரீதியில் அமைதியை […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வு அவசியம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் வலியுறுத்து!

  • May 20, 2026
  • 0 Comments

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

உலக இணையத்திலிருந்து தொடர்ந்து 82-வது நாளாவும் துண்டிக்கப்பட்டுள்ள ஈரான்

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான இணைய முடக்கம் இன்று 82 ஆவது நாளை எட்டியுள்ளது. இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் (NetBlocks) இதனைத் தெரிவித்துள்ளது. ஈரான் உலகளாவிய இணைய இணைப்பிலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் அரசு கட்டுப்படுத்தியது. இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோதும், இதேபோன்ற இணைய முடக்கம் சுமார் […]