தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!
அமெரிக்கா ஒரு புதிய போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf எச்சரித்துள்ளார்.
எனவே, தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
” எதிரிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் மோதலுக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” – எனவும் ஈரான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.



