ஐரோப்பா செய்தி

ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். அதேவேளை, ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பிராந்திய மோதல்களை உண்மையாக தணிக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

உலகம்

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் குவெட்டாவில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள  ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் இந்த வெடிவிபத்தால் ரயில் ஒன்று தடம் புரண்டதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதாக  அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது “அப்பாவி உயிர்களின் துயரமான இழப்புக்கும், மேலும் பலர் […]

இலங்கை

மாகாண சபைத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை!! டில்வின் சில்வா விளக்கம்!

  • May 24, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திறப்புவிழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பொருளாதார […]

உலகம்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு சம்பவம் – தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்!

  • May 24, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளனார். 21 வயதுடைய நசீர் பெஸ்ட் ( Nasire Best)  என்ற நபர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின்போது மற்றொரு நபர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெஸ்டுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தைய மாதங்களில் அச்சுறுத்தல்கள் விடுப்பது மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது உட்பட சட்டத்திற்கு புறம்பான […]

உலகம்

காங்கோவில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த கூடாரங்களுக்கு தீ வைப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

காங்கோவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த கூடாரம் ஒன்று நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் வெளியேறியுள்ளனர். நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதிக தொற்றுத்தன்மை கொண்ட எபோலா நோயாளிகளின் உடல்களைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்களும் அரங்கேறி […]

இலங்கை

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

  • May 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என அடையளாம் காணப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான குறித்த நபர் வீட்டில் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேற்படி முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இதன்போது அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

உலகம் செய்தி

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில்: விரைவில் பேச்சு!

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவது இணக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். ” சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களுடன் “அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்” (Memorandum of Understanding) குறித்து “மிகவும் நல்ல முறையில் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.” என […]

இலங்கை செய்தி

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் விஜித ஹேரத்!

  • May 24, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார். நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் ஆஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். […]

இலங்கை செய்தி

தமிழர் விடயத்தில் ராஜபக்ச வழியிலேயே அநுர: இடதுசாரி தலைவர் குற்றச்சாட்டு!

  • May 24, 2026
  • 0 Comments

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட சில்லறைத்தனமான அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றிவருகின்றது என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “வீதி அமைத்தல், பாலம் அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களே தேசிய இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையென ராஜபக்ச அரசாங்கம் கருதியது. ஆனால் அந்த சில்லறைத்தனமான அணுகுமுறையை […]