உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்பு – 09 பேருக்கு பஹ்ரைனில் ஆயுள் தண்டனை

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உடன் தொடர்பு வைத்து பஹ்ரைனுக்கு எதிராக “விரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கிய இணையதளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்ததுடன், அதனுடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்களுக்கும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு

தமிழக முதலமைச்சர் விஜயிடம் திடீர் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

  • May 24, 2026
  • 0 Comments

ஓடிடி தளம் சரிவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை கடிதத்தில்,  “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கட்டத்தில் ஓடிடி சந்தை திடீரென உருவாகி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அந்த சந்தை திடீரென […]

உலகம் செய்தி

லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

  • May 24, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் […]

உலகம்

தட்டம்மை நோய்த் தாக்கம் – வங்கதேசத்தில் 500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

வங்காளதேசத்தில் ஏற்பட்ட தட்டம்மை நோய்த் தாக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் திணறி வருவதாகவும், தீவிர சிசிச்சைப் பிரிவுகளில் படுகை பற்றாக்குறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நோயை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் […]

உலகம் செய்தி

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 33 கப்பல்கள் பயணம்

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 33 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா!! 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள் பயன்பாடு!

  • May 24, 2026
  • 0 Comments

கீவ் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலில் ரஷ்யா அதிவேக ஒரெஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 83 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் குடியிருப்புப் பகுதிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதலில் ஒரெஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே […]

இந்தியா

இந்தியாவில் கடும் வெப்பம் – 02 நாட்களில் 40 பேர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 02 நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பல நகரங்களில், சிலவற்றில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அதிக வெப்பநிலை நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும், இது இரத்த உறைவுக்கும், மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார […]

இலங்கை

இலங்கை ரூபாவின் மதிப்பில் திடீர் மாற்றம்!

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை   2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு […]

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் பாகாயி கூறினார். இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தம் “பெரும்பாலும்  முடிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விவரங்கள் விரைவில் […]