வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு சம்பவம் – தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்!
வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளனார்.
21 வயதுடைய நசீர் பெஸ்ட் ( Nasire Best) என்ற நபர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின்போது மற்றொரு நபர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெஸ்டுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தைய மாதங்களில் அச்சுறுத்தல்கள் விடுப்பது மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது உட்பட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி




