உலகம்

கடவுச்சீட்டுகளில் ட்ரம்பின் உருவப்படத்தை பதிக்க ஏற்பாடு!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தைச் சேர்க்க அமெரிக்க வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சுதந்திரத்தினத்தின்  250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட கடவுச்சீட்டுகளிலேயே ட்ரம்பின் உருவப்படம் பொறிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில்  தற்போதைய தலைவரின் உருவப்படம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்புப் பதிப்பை நிராகரிக்க முடியுமா […]

இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு விசாரணைக்கு!

  • April 29, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ரணில் விக்ரமசிங்க, தான் பதவியில் இருந்தபோது, தனது மனைவி  மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்ல அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுளு்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஏப்ரல் 24 அன்று, […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்கள் அவசர சந்திப்பு! பின்னணி என்ன?

  • April 28, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மூன்று பிரதான பௌத்த பீடங்களி ன்மகா சங்கத்தினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (27) நடைபெற்றது. இன்று பிற்பகல் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் […]

ஐரோப்பா செய்தி

காங்கிரஸில் உரையாற்றி புதிய வரலாறு படைக்கிறார் மன்னர் சார்லஸ்

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  இடையிலான இருதரப்பு சந்திப்புக்கு முன்பு, அரச குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில்  நடைபெறும் இராணுவ வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். அதன்பின், காங்கிரஸில் உரையாற்றும் இரண்டாவது பிரித்தானிய மன்னர் என்ற வரலாற்றுச் சாதனையை மன்னர் சார்லஸ் படைக்க உள்ளார். இதற்கு முன், அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி  1991ஆம் ஆண்டு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியிருந்தார். ரான் போர் சூழ்நிலை காரணமாக இரு நாடுகளின் […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார். வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக்  கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாத யாத்திரை கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி, தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 07 நாட்கள் பயணித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். “மலையகத் தமிழர்” என அடையாளம் வழங்குவதற்கு அப்பால் அவர்கள் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய நிலம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் சிறிதுங்க ஜயசூரிய கூறியவை வருமாறு, “இலங்கையென்பது ஜனநாயக நாடு. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கின்றது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]

ஐரோப்பா செய்தி

மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட […]

செய்தி

மே தினக் கொண்டாடத்திற்கான ஐ.ம.ச வின் அழைப்பை மறுத்த ஐ.தே.க 

  • April 28, 2026
  • 0 Comments

மே தினக் கொண்டாடத்தில் தங்கள் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், […]

செய்தி

மெகசின் சிறைச்சாலை மோதல் சிறை அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக […]

error: Content is protected !!