உலகம்

நீடித்த அமைதிக்கான அஸ்திவாரம் – 34 ஆண்டுகளின் பின் ஒன்றுக்கூடும் தலைவர்கள்!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் 34 ஆண்டுகளுக்கு பின் நாளைய தினம் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை  முன்னெடுப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து  அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனானின் தூதர்கள் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முயற்சிக்கிறோம். “இரு […]

உலகம்

சோமாலிலாந்துக்கான முதல் தூதரை நியமித்தது இஸ்ரேல்!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய அரசாங்கம் சோமாலிலாந்துக்கான (Somaliland) தனது முதல் தூதரை நேற்று நியமித்துள்ளது. கென்யாவிற்கான இஸ்ரேலிய தூதராகப் பணியாற்றிய மைக்கேல் லோடெமின் (Michael Lotem) புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலான தூதரகத் தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சோமாலிலாந்தை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கையை வரவேற்றுள்ள அந்நாட்டின் ஜனாதிபதி  அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி (Abdirahman Mohamed Abdullahi), நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இஸ்ரேல் தன்னை ஒரு “நம்பகமான கூட்டாளி” […]

இலங்கை செய்தி

வடக்கில் திணைக்களங்களை கண்காணிப்பதற்கு விசேட குழு!

  • April 16, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், நேற்றுப் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:- மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி […]

உலகம்

துருக்கியில் இருவேறு பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு – 09 பேர் பலி!

  • April 16, 2026
  • 0 Comments

துருக்கியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள் உள்பட ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி (Mustafa Cifci) உறுதிப்படுத்தியுள்ளார். கஹ்ரமன்மராஸ் (Kahramanmaras) பகுதியில் உள்ள அய்ஸர் காலிக் ( Ayser Calik)  மேல்நிலைப் பாடசாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதாக  உள்ளூர் ஆளுநர் முகர்ரென் உன்லுயர் (Mukerren Unluer) தெரிவித்துள்ளார். இதேவேளை  நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள […]

ஆஸ்திரேலியா செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா!

  • April 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (16) வெளியிடப்பட்டுள்ள ‘2026 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின்’ (National Defence Strategy 2026) படி, நாட்டின் பாதுகாப்புச் செலவினம் வரும் 2033 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்காக கூடுதலாக 53 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும். இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். “இரண்டாம் […]

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (16) நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும் Punjab Kings ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். தொடர் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்த மும்பை அணி, தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காமல் தொடரில் ஒரே அணியாக ஆதிக்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலையும் பறிபோகுமா?

  • April 16, 2026
  • 0 Comments

“வெடுக்குநாறிமலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். “வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே […]

விளையாட்டு

முதலிடத்துக்கு முன்னேறியது RCB!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Royal Challengers Bangalore (RCB) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. RCB அணி […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை!

  • April 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கிடையில் ஜித்தாவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் அமைதி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளை சவூதி இளவரசர் வரவேற்றுள்ளார்.

இலங்கை

09 சீனப் பிரஜைகள் கைது!

  • April 16, 2026
  • 0 Comments

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விமான […]

error: Content is protected !!