டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால தங்குமிட வசதி!
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் , அவற்றைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தல் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரை பாதுகாப்பான மற்றும் […]













