ஈரான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளட்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் அமெரிக்காவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், “நல்ல, பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள்” இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தனது தூதர்களை போக வேண்டாம் என ட்ரம்ப் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் அதிகாரிகளை மட்டும் சந்தித்த பின்னர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





