உலகம் செய்தி

குவைட் மற்றும் கட்டாரின் உயர்மட்ட இராஜதந்திரிகள் அவசர கலந்துரையாடல்

  • March 15, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள்’ குறித்து குவைட் மற்றும் கட்டாரின் உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்துரையாடியுள்ளனர். குவைட்டின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட் வெளியுறவு அமைச்சரும் கட்டார் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிராந்திய நாடுகளுக்கு எதிரான ஈரானின் கண்டிக்கத்தக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள், சர்வதேச மட்டங்களில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் கடுமையான விளைவுகள் குறித்து இரு தலைவர்கள் இடையே […]

இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!

  • March 15, 2026
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர். இதன்போது , ஈச்சலம்பற்று கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 318 பயனாளர்களுக்கும், குச்சவெளி கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 88 […]

ஐரோப்பா செய்தி

அன்னையர் தினம் – தனது தாயாருக்கு பிரதமர் உருக்கமான அஞ்சலி

  • March 15, 2026
  • 0 Comments

பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர், அன்னையர் தினமான இன்று தனது மறைந்த தாயாருக்கு நெகிழ்ச்சியான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது தாயார் ஜோசபின் ஸ்டார்மர் (Josephine Starmer )அமைத்துக் கொடுத்த “நம்பமுடியாத உதாரணமே” தனது வாழ்வின் வழிகாட்டி என்றும் பிரதமர் பெருமிதமடைந்தார். தனது தாயார் நீண்ட காலம் கடுமையான நோயுடன் போராடிய போதிலும், ஒருபோதும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்கே முதலிடம் கொடுத்தார் என்றும் பிரதமர் தனது தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘ஸ்டில்ஸ் நோயால்’ (Still’s […]

இலங்கை செய்தி

அரச ஊழிர்களுக்கு வீட்டிலிருந்து வேலை?

  • March 15, 2026
  • 0 Comments

வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

  • March 15, 2026
  • 0 Comments

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபைத் தேர்தல் திகதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக சபைத் தேர்தல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். […]

இலங்கை செய்தி

போத்தல்கள்,கொள்கலன்களில் எரிபொருள் வழங்க தடை

  • March 15, 2026
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றையதினம் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அனைத்து நிலையங்களும் இந்தத் தொழில்நுட்ப முறைமையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செல்லுபடியாகும் QR குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்பட […]

இலங்கை செய்தி

தெற்கு கடற்பரப்பில் அதிரடியாக ஐவர் கைது

  • March 15, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட பெருமளவான போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்றினால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த கப்பல் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் செய்தி

உச்ச தலைவர் உயிருடன் இருந்தால் சரணடைவதே ஒரே வழி: ட்ரம்ப் வலியுறுத்து!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “உயிருடன் இல்லை என்றே எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலவேளை அவர் உயிருடன் இருந்தால்கூட தனது நாட்டுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் சரணடைய வேண்டும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றது. விதிமுறைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை. அணு சக்தி திட்டங்களை ஈரான் முழுமையாக கைவிட […]