இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து தெரிவுக்குழு இன்று ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசு நியமித்திருக்கின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நால்வரும் இவ்வாறு குற்றஞ்சாட்டினர். தெரிவுக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இன்று முற்பகல் 11 மணி முதல் நடைபெற்றது. ஏற்கனவே எட்டாவது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னர் இருந்த தேர்தல் முறைமைகளின் கீழ் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியை தாக்கும் மூளைக்காய்ச்சல் – மென்பி உறுதி, மக்களிடையே அச்சம் அதிகரிப்பு

  • March 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பரவியுள்ள மூளைக்காய்ச்சலுக்குக் காரணமான கிருமி வகை “மூளைக்காய்ச்சல் பி (MenB).” என பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) உறுதிப்படுத்தியுள்ளது. மென்பி தற்போது பிரித்தானியாவில் அதிகம் காணப்படும் பக்டீரியா மூளைக்காய்ச்சல் வகையாக இருந்து, 80%க்கும் மேற்பட்ட தீவிர தொற்றுகளுக்குக் காரணமாக உள்ளது. இந்த தொற்று குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கவலைகள் எழுந்துள்ளன. முதல் பாதிப்புகள் பதிவான பின்னர் ஒரு நாள் கழித்து மட்டுமே தகவல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், […]

இலங்கை செய்தி

தென் கடலில் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் – அறுவர் கைது

  • March 17, 2026
  • 0 Comments

கடற்படையினரால் சுமார் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. தென் கடலில் IMULA – A- 1108GLE என்ற இலக்கத்தைக் கொண்ட பிரியங்கா – 6 பலநாள் மீனவப் படகு மூலம் இந்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படகிலிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் கறுப்புக் கொடி: மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

  • March 17, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. […]

இலங்கை செய்தி

“எரிபொருள் சிக்கனம்” – ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

“எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் . அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நேற்று […]

இந்தியா செய்தி

முட்டைகளில் காலாவதி திகதி அவசியம் – புதிய உத்தரவு அடுத்த மாதம் முதல் அமுல்

  • March 17, 2026
  • 0 Comments

  கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் காலாவதி திகதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் பழைய முட்டைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பனை செய்ய முடியாது. இதனால், உ.பி.யில் கடைக்காரர்கள் இனி […]

இலங்கை செய்தி

ஹொங்கொங்கிலிருந்து கொழும்பை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

  • March 17, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘சீஃபிரண்டியர்’ என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

  • March 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ஆயுத உற்பத்தி ஆலைகளையும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தை மேற்கோள் காட்டி, தஸ்னிம் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலிய காவல்துறைக்கு சொந்தமான இணைய மையங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறப்படுகிறது. “இன்று காலை முதல், சியோனிச ஆட்சியின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ரஃபேல் ஆயுத உற்பத்தி வளாகத்தையும் ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

போர் பதற்ற நெருக்கடி – இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

  • March 17, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவத்த அவர் “வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 க்கு ஊடக சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் […]

உலகம் செய்தி

ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் 16 பேர் குவைட்டில் அதிரடியாக கைது – லெபனான் கண்டனம்

  • March 17, 2026
  • 0 Comments

குவைட்டை இலக்காகக் கொண்ட ஹெஸ்புல்லாவின் சதித்திட்டம் எனக் கூறப்படுவதை லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 குவைட் குடிமக்கள் மற்றும் 02 லெபனான் நாட்டினர்கள் உட்பட 16 பேரை கைது செய்துள்ளதாக குவைட் உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, லெபனான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]