அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் முடிவால் எதிரணிக்குள் குழப்பம்!

  • March 18, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK தீர்மானித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் Chanakyan தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை போதுமான […]

இலங்கை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நன்கொடை!

  • March 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, […]

இலங்கை

11 ஆண்டுகளுக்குப் பின் கொழும்பு வரும் British Airways!

  • March 18, 2026
  • 0 Comments

British Airways நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் Gatwick மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு British Airways நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவை இதுவாகும். ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் Gatwick விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்துக்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பயணச் சீட்டு விற்பனை நேற்று […]

உலகம்

UAEமீது ஈரான் தாக்குதல்: ஆஸ்திரேலிய படைத் தளம் சேதம்!

  • March 18, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தில் UAE உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் Al Minhad Air Base மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும்,அ முகாமிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். இந்தத் தளம் ஆஸ்திரேலியாவின் முக்கியப் பயிற்சி மற்றும் […]

உலகம்

இஸ்ரேல்மீது ஏவுகணை மழை பொழியும் ஈரான்: இருவர் பலி!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 19 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலால் ரமத் கான் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன என்றும், அங்கிருந்து புகை மூட்டம் எழுவதாகவும் அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பல கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளதோடு, அப்பகுதி முழுவதும் […]

உலகம் செய்தி

நிச்சயம் பழி தீர்ப்போம்: ஈரான் ராணுவத் தளபதி சபதம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி Ali Larijani கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி Amir Hatami கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே இஸ்ரேலின் மையப்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் MenB தடுப்பூசி திட்டம் அறிவிப்பு

  • March 17, 2026
  • 0 Comments

கென்டர்பரியில் (Canterbury) உள்ள கென்ட் பல்கலைக்கழக (University of Kent) விடுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு எதிராக, வரும் நாட்களில் அரசாங்கம் ஒரு இலக்கு மென்பி (MenB) தடுப்பூசி திட்டம் தொடங்கும் என சுகாதாரச் செயலாளர் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த “முன்னெப்போதும் இல்லாத இந்த நோய்ப் பரவல்” குறித்து ஸ்ட்ரீட்டிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். இன்று காலை 09:30 க்கு நிலவரப்படி, நான்கு MenB நோய்த்தொற்று பாதிப்புகள் உறுதியானதாகவும் […]

இலங்கை செய்தி

நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது

  • March 17, 2026
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை தனது நடுநிலை கொள்கையிலிருந்து தவறாது. சர்வதேச அளவில் […]

உலகம் செய்தி

போருக்கு மத்தியில் அமெரிக்காவின் முக்கிய புள்ளி ராஜினாமா!

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் US’s National Counterterrorism Center இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது. ஈரானுக்கு எதிரான போரை தன்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்எனக் கூறப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இவர், இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் இத்தகைய மோதல்கள் அமெரிக்காவின் செல்வத்தையும் உயிர்களையும் […]

இலங்கை செய்தி

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன- மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

  • March 17, 2026
  • 0 Comments

  எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யும் போது சிலருக்கு மாத்திரம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் […]