உலகம் செய்தி

இஸ்ரேல்மீது ஈரான் கொத்துக் குண்டு தாக்குதல்: 192 பேர் காயம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் உக்கிர தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மேற்படி கொத்து குண்டு தாக்குதலில் இஸ்ரேலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது. அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” […]

இலங்கை செய்தி

தெற்கில் நால்வரை பலியெடுத்த கோர விபத்து: ஐவரின் நிலைமை கவலைக்கிடம்!

  • March 18, 2026
  • 0 Comments

அம்பலாங்கொடை, கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு இ.போ.ச. SLTB பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை செய்தி

எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்த இலங்கையில் புதிய ஏற்பாடு!

  • March 18, 2026
  • 0 Comments

இலங்கையில் QR குறியீட்டு முறைமையின்கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு நாளை (19) முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால் (0, 2, 4, 6, 8) இரட்டை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெறலாம். (உ+ம் 20,22 ) இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால் ஒற்றை எண்கள் […]

இலங்கை செய்தி

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை

  • March 18, 2026
  • 0 Comments

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை(18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது. ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என […]

விளையாட்டு

பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 20 ஆம் திகதி 3ஆவது போட்டி!

  • March 18, 2026
  • 0 Comments

தென்னாபிரிக்கா South Africa மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது. 2 ஆவது போட்டி ஹாமில்டன் மைதானத்தில் […]

இலங்கை செய்தி

“பைபிள் விவகாரம்” – பொலிஸ் அதிகாரிக்கு திருநீறு பட்டை போட்டது சிவசேனை!

  • March 18, 2026
  • 0 Comments

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபையொன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தார் எனக்கூறி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனமொன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

  • March 18, 2026
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஒப்பந்தம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது. தொகுதிப் பங்கீடு இறுதிபடுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன், “கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக […]

இந்தியா தமிழ்நாடு

அதிரும் தமிழக அரசியல் களம்: விஜய் தனி வழி!

  • March 18, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இம்முறை நான்குமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க. மற்றும் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மறுபுறத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்திருக்கின்றன. வழக்கம் போல் தேர்தலில் தனித்து நிற்பது என்ற ஒற்றை இலக்குடன் சீமான் களத்தில் உள்ளார். இந்நிலையிலேயே […]

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

உலக உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்

  • March 18, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் Carl Skau தெரிவித்துள்ளார். இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த […]