நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களுக்கு $1.4 பில்லியன் செலவிட உள்ள ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மிகப் பெரிய தானியக்கக் நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் உருவாக்க $1.4 பில்லியனை முதலிடவிருக்கிறது. ‘கோஸ்ட் ஷார்க்’ எனும் பெயர்கொண்ட அது, நாட்டின் கடற்படை ஆற்றல்களை வலுப்படுத்தும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் புதன்கிழமை (செப்டம்பர் 10) சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதனைத் தெரிவித்தார். ஏண்டுரில் ஆஸ்திரேலியா நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் உருவாக்கப்படும். “உலகின் ஆக உயரிய தொழில்நுட்ப ஆற்றல்கொண்ட வாகனம் இது. […]













