டெல்லியில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் ஐவர் கைது ; கைப்பற்றப்பட்டட ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்
பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐந்து தீவிரவாதிகளைப் புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மத்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகப் புதுடெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செப்டம்பர் 9ஆம் திகதி இரவு மும்பையிலிருந்து புதுடெல்லி வந்திறங்கிய அபு பக்கர், அஃதாப் […]













