வட அமெரிக்கா

கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது : விசாரணைகளில் வெளிவந்த தகவல்!

  • November 28, 2024
  • 0 Comments

கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பிராம்ப்டனில் வசிக்கும்  அர்ஷ்தீப் சிங் என்ற 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பீல் பிராந்திய காவல்துறையின் (பிஆர்பி) கூற்றுப்படி, சிங் பாதிக்கப்பட்டவர்களை ரைட்ஷேர் செய்வதாகக் காட்டிக் கொண்டு தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த இளைஞரால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த மூன்று சம்பவங்களுக்கும் ஒரே சந்தேக நபர்தான் காரணம் என்று PRP புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள். […]

ஆசியா

சீன இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் பதவிநீக்கம்!

  • November 28, 2024
  • 0 Comments

சீன இராணுவத்தின் உயர் அதிகாரியான “மியாவோ ஹுவா” பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான ஒழுக்க மீறல்கள் காரணமாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவின்  சக்திவாய்ந்த மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினரான மியாவோ மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் “கடுமையான ஒழுக்க மீறல்கள்” என்பது பொதுவாக சீனாவில் உள்ள அதிகாரிகளால் ஊழலுக்கான வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.

வட அமெரிக்கா

சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க அமெரிக்கா – மெக்சிகோ இடையே ஒப்பந்தம்

  • November 28, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20ம் திகதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு அமலில் […]

இலங்கை

இலங்கை வாழ் மக்களுக்கு எலிகாய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • November 28, 2024
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர  கருத்துத் தெரிவிக்கையில், எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகும். எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 22 […]

ஆசியா

பாகிஸ்தானில் பழங்குடி மக்களிடையே மோதல் ; பலியானோர் எண்ணிக்கை 76ஆக உயர்வு

  • November 28, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகி வருகின்றனர். சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் […]

இலங்கை

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கையில் இலங்கையின் பல பகுதிகள்

  • November 28, 2024
  • 0 Comments

இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட, […]

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து!! இவர்களின் திருமணம் செல்லாது..! நீதிமன்றம் அதிரடி

  • November 28, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவில் ரூ.30 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அதே போல் தன்னுடைய நடிப்பின் திறமையால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த பெருமை தனுஷுக்கு உண்டு. நடிகர் தனுஷின் வளர்ச்சியில் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பங்கு முக்கியமானது. ஐஸ்வர்யா தான் தனுஷுக்கு பல விஷயங்களில் பக்க பலமாக இருந்தவர். அதேபோல் தனுஷ் இன்று […]

பொழுதுபோக்கு

காதலை உறுதிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்… பையன் யார் தெரியுமா?

  • November 28, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை கீர்த்தி. தற்போது 32 வயதாகும் கீர்த்தி சுரேஷ் யாரை திருமணம் செய்து கொள்வார்? எப்போது கல்யாணம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. மேலும், அவர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. அதுமட்டுமின்றி ஆண்டனி தட்டில் பற்றி அலசி ஆராய்ந்த போது அவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் […]

வட அமெரிக்கா

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • November 28, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்தநிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். இலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. […]

ஆஸ்திரேலியா இலங்கை

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்து அறிவிப்பு

  • November 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு முதலாளிகள் அவர்களை சுரண்டுவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டங்களை மீறும் பணியிடங்களின் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை வேண்டுமென்றே மீறும் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை பல ஆண்டுகளுக்கு தடை செய்ய முடியும் என்றும் […]