வட அமெரிக்கா

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் பதவி ஏற்கவுள்ளார்.

இந்தநிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

இலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நியூயார்க்கிலிருந்து முக்கிய பதவியொன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்