இங்கிலாந்தில் எண்ணற்ற கலவரங்களுக்கு திட்டம் : காவல் நிலையத்திற்கும் தீ வைப்பு!
இங்கிலாந்தில் பெருகி வரும் வன்முறை சம்பவங்களால் நேற்று (02.08) இரவு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர்லேண்ட், டைன் அன்ட் வேர் ஆகிய இடங்களில் காவல்துறை நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மசூதியை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌத்போர்ட் அட்டூழியத்தைத் தொடர்ந்து வலதுசாரி குழுக்களால் தவறான தகவல் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறை அறைகள் நிரம்பியிருந்தாலும், இங்கிலாந்து முழுவதும் அதிக கலவரங்கள் […]












