அமெரிக்காவில் முதல் முறையாக குற்றவாளியின் பெற்றோருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!
அமெரிக்காவின் மிச்சிகனில் நான்கு பாடசாலை மாணவிகளை சுட்டுக் கொன்ற மாணவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருவரின் தண்டனையையும் 7 வருடங்களாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், தண்டனையை குறைக்க வேண்டாம் என அரச சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, அமெரிக்காவில் பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் குற்றவாளியின் பெற்றோர் தண்டிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை. ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்லி ஆகியோர் இன்று (10.04) […]













