இலங்கை

இலங்கை : கண்டி மாநகர சபை முன் திரண்ட ஊழியர்கள்!

கண்டி மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும் மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய சந்தைக்கு முன்பாக அனுமதியற்ற வர்த்தகரால் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மத்திய சந்தைப் பகுதிக்கான அணுகு வீதியை அடைத்து வியாபாரம் செய்வதை தவிர்க்குமாறு  அறிவித்தமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான நிர்வாக அதிகாரி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னர், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த நிலையில், தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகரசபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்