ஆஸ்திரேலியா

சிட்னியில் பல்பொருள் ஆங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் – இதுவரை ஐவர் பலி!

  • April 13, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கத்திக் குத்து சம்பவத்தில் 9 மாத குழந்தை உட்பட மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இதனையடுத்து, கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பல்பொருள் அங்காடியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

இலங்கை

திருகோணமலை – கிராமத்துக்குள் நுழைந்த முதலை… வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

  • April 13, 2024
  • 0 Comments

திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் முதலையொன்று நுழைந்துள்ளது. 9 அடி நீளமான முதலையொன்று கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையானது (12) இரவு கிராமத்துக்குள் நுழைந்ததாகவும் இன்று (13) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் – அமெரிக்கா எச்சரிக்கை!

  • April 13, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் சுமார் 100 குரூஸ் ஏவுகணைகளை தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக வல்லரசுகளின் கவனம் அந்த பிராந்தியத்தின் மீது திரும்பியுள்ளது. எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தங்கள் நாடு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரானும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய வெப்பத்தை மேலும் […]

ஐரோப்பா

ஸ்பெயின்: நான்கு பெண்களின் சடலங்களுடன் மத்திய தரைக்கடலில் மிதந்து வந்த படகு!

  • April 13, 2024
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகு தத்தளித்தபடி மிதந்து வந்ததை கடற்படையினர் கண்டறிந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அதில் 4 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகை இன்று காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் இழுத்து வந்தனர். படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், […]

வட அமெரிக்கா

ஜப்பான், பிலிப்பைன்ஸ்ஸை இரும்புக் கவசம் போல் பாதுகாப்போம்… ஜோ பைடன் உறுதி!

  • April 13, 2024
  • 0 Comments

இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாக்கும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான், பிலிப்பின்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய முத்தரப்பு கூட்டத்தை வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேற்று தொடங்கி வைத்தார். பிலிப்பின்ஸ் அதிபர் பொடினான்ட் மார்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கிழக்கு சீன கடலில் சென்காகு தீவுகளை சீனா உரிமை […]

இலங்கை

யாழிலிருந்து – மட்டக்களப்பு நோக்கி பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 13, 2024
  • 0 Comments

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (13) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மட்டக்களப்பு – பாரதி லேன் பகுதியில் வசித்து வரும் யோகநாதன் அசோக்குமார் (40வயது) மற்றும் சுப்ரமணியம் சிவசுப்ரமணியம் (44வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. காயமடைந்த இருவரையும் மொரவெவ பொலிஸார் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த […]

இலங்கை செய்தி

கொழும்பில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை – இருவர் காயம்

  • April 13, 2024
  • 0 Comments

மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை – காரணம் என்ன?

  • April 13, 2024
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு வளியாக முடிவுக்கு வந்தது. ஆனால் அதே தொடர் பெயரில் முதல் பாகத்தில் நடித்த சிலரும், புதிய நடிகர்கள் பலரும் நடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த 2ம் பாகம் தந்தை, மகன்களை சுற்றிய கதையாக அமைந்துள்ளது. தற்போது கதையில் சரவணனின் திருமணம் நிகழ்வு நடந்து வருகிறது. இந்த தொடரில் ராஜியின் சித்தியாக ரிஹானா நடித்து வந்தார். ஆனால் திடீரென […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியின் மகளின் நாட்குறிப்பை திருடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • April 13, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகளது நாட்குறிப்புப் புத்தகத்தை திருடி பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார். அதனை விற்ற பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவைச் சேர்ந்த அவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனையும், 3 மாத வீட்டுத் தடுப்புக்காவலும் விதிக்கப்பட்டது. நாட்குறிப்புப் புத்தகம் 4 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. எய்மி ஹாரிஸ் என்ற அந்தப் பெண் அதை Project Veritas எனும் சமூக ஆர்வலர் குழுவுக்கு விற்றதாக தெரியவந்துள்ளது. ஹாரிஸ் திரு. பைடனின் மகள் ஆஷ்லி பைடனின் (Ashley […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு தமிழ் – சிங்கள புத்தாண்டு வாழ்த்து கூறிய ஜனாதிபதி

  • April 13, 2024
  • 0 Comments

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் எனவும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் மற்றும் உலகம் என்பன முன்னேற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக […]