ஆசியா

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண நிதி ஸ்பெயின் வெளியிட்ட அறிவிப்பு

ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு ஸ்பெயின் கூடுதலாக 3.5 மில்லியன் யூரோக்கள் உதவி அனுப்புவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலுக்குள் நடந்த ஹமாஸ் தாக்குதலில் 12 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்கள் பங்கேற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நிதி உதவியை அதிரடியாக நிறுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க […]

இலங்கை

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர அமைச்சரவை அனுமதி!

  • February 5, 2024
  • 0 Comments

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இன்று (05.02)அமைச்சரவையின் கவனத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்தார். இந்நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.  இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கை

ஆஸ்திரேலியா விருதுகள் புலமைப்பரிசில்கள் 2025: வெளியான முக்கிய அறிவிப்பு

Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு, வளரும் நாடுகளிலுள்ள அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச விருது ஆகும். இந்த விருது பெறுபவர்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மூலம், அவர்களது சொந்த நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியா விருதுகள் 2025 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. 2025 இல் தொடங்கும் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டு 30 ஏப்ரல் […]

பொழுதுபோக்கு

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கும் ரஜினி-கமல்

  • February 5, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தலைவர் 171, தக் லைஃப் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980, 1990களில் ரஜினி, கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கமாக இருந்தது. இருவருமே நீயா நானா என பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டனர். கடைசியாக […]

உலகம்

இருளில் மூழ்கிய கலிஃபோர்னியா!

  • February 5, 2024
  • 0 Comments

கலிஃபோர்னியாவில் ஏறக்குறைய 50000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா கடந்த சில நாட்களில் இரண்டு புயல்களை சந்தித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மழை மற்றும் மோசமான வானிலை நிலவுகிறது. இதன்படி சாண்டா பார்பரா முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான பகுதியில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது. அத்துடன் சுமார் 37 மில்லியன் குடியிருப்பாளர்கள் இப்போது வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

அண்டை நாடான லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. காஸா-இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேலின் வடக்கு எல்லை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக போா் தொடுப்பது எங்களுடைய முதல் தோ்வாக இருக்காது. ஆனால், எதற்கும் தயாராக உள்ளோம். லெபனான், சிரியா என எவ்வளவு தொலைவில் அவா்கள் இருந்தாலும், அவா்களுக்கு […]

இலங்கை

இலங்கையில் பட்டப்படிப்புகளை டிஜிட்டல் மயமாக்க நவடிக்கை!

  • February 5, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தர பட்டப்படிப்புகளை கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் உள்ள 3,000 உயர்நிலைப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் மார்ச் […]

ஐரோப்பா

மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

உக்ரைனுக்கான நிதி திரட்டுவதற்காக முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பிணையமாகப் பயன்படுத்தும் எந்தவொரு முயற்சியும் சட்டவிரோதமானது மற்றும் முழு உலகப் பொருளாதார அமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது. G7 நாடுகள் உறைந்த ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கான நிதி திரட்டுவதற்கு இணையாகப் பயன்படுத்துவதை பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கத்திய நாடுகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் 260 பில்லியன் யூரோக்களை உக்ரைனுக்கான கடனுக்காகப் பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு G7 நாடுகளை பெல்ஜியம் கேட்டுக் கொண்டுள்ளது .

உலகம்

தெற்கு கலிஃபோர்னியாவில் துப்பாகியால் சுட்டுக்கொண்ட குழந்தை பலி!

  • February 5, 2024
  • 0 Comments

தெற்கு கலிஃபோர்னியாவில் மூன்று வயது குழந்தையொன்று தன்னைத் தானே சுட்டுக்கொன்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரீன்வில்லின் பீச் தெருவில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குழந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் போலீசார் பல விவரங்களை வெளியிடவில்லை. இது ஒரு சோகமான விபத்து என்றும், வர்ணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் […]

ஆசியா

பாகிஸ்தானில் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்!

  • February 5, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள்  இன்று (05.02) தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏறக்குறைய 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் சவுத்வான் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கந்தாபூர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் ஆரம்பத்தில் ஸ்னைப்பர்களைப் பயன்படுத்தி காவல் நிலையத்திற்குள் ஊடுருவியதாகவும். 30 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்  மூன்று திசைகளில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் […]