இலங்கை

இலங்கை பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று முறிந்து வீழந்ததில் மாணவர் ஒருவர் பலி!

  • February 5, 2024
  • 0 Comments

கம்பளையில் உள்ள  பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நர்சரி பிரிவில் கல்வி பயிலும் 30 மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது மேற்படி மரம் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

விஜய்யின் என்ட்ரி… கடுப்பாகி ட்வீட் போட்ட நடிகை கஸ்தூரி – எதற்காக தெரியுமா?

  • February 5, 2024
  • 0 Comments

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது “தமிழக வெற்றி கழகம்” கட்சி குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தான் ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு, தன் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு […]

இலங்கை

கோவையில் 52 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட மாணவர்கள் : நெகிழ்ச்சியான சம்பவம்!

  • February 5, 2024
  • 0 Comments

கோவையில் நடைபெற்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில் 52 வருடம் கழித்து தங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோவை சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களை வரவழைத்து […]

உலகம்

தென்மேற்கு ஜெர்மனியில் தீ விபத்தில் ஐவர் படுகாயம்

ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் நேற்று பிற்பகல் திருவிழா மிதவை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மனியில் பிரான்சின் எல்லையை ஒட்டிய நகரமான கெஹ்லில் உள்ளூர் அணிவகுப்பில் பங்கேற்ற மிதவையின் ஒரு பகுதி தீப்பிடித்தது. இதன்போது தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மீதமுள்ள அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை

முல்லைத்தீவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை […]

ஐரோப்பா

சூடானால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

  • February 5, 2024
  • 0 Comments

சூடானின் போரிடும் தரப்புகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படாவிட்டால் ஐரோப்பா புதிய சிக்கல்களை சமாளிக்க வேண்டி வரும் என அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் அங்குள்ள சூடானிய அகதிகள் ஐரோப்பா நோக்கி நகர்வார்கள் என்றும், இதனால் புதிய சிக்கல்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஐரோப்பியர்கள் எப்போதும் மத்திய தரைக்கடல் வழியாக வருபவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள் என்றும் லிபியா, துனிசியா மற்றும் மத்தியதரைக் கடல் வழியாக மக்கள் […]

உலகம்

கிராமி விருது விழாவில் வைத்து பிரபல ராப் இசை பாடகர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

66 வது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது பிரபலமான ராப் இசை பாடகரான கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் அவருடைய இரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசைத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் குறித்த விருது வழங்கும் நிகழ்வானது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் விருதினை வென்ற கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

ஐரோப்பா

லண்டனிலிருந்து அதிகப் பணத்தைக் கோரும் புதிய வடக்கு அயர்லாந்து அரசாங்கம்

வடக்கு அயர்லாந்தின் புதிய அதிகாரப் பகிர்வு நிர்வாகி பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 3.3 பில்லியன் பவுண்டுகள் தொகுப்பு, வரவேற்கத்தக்கது என்றாலும், குறுகிய கால தீர்வை மட்டுமே வழங்கும் மற்றும் நிலையான பொது சேவைகளை வழங்குவதற்கான அடிப்படையை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிசம்பரில் இந்த தொகுப்பை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

நிதி நிறுவனமொன்றில் திருட்டு சம்பவம் ;இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜனவரி 31ஆம் திகதி, சிலாபம் பொலிஸ் பிரிவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் புகுந்து 7,090,939 ரூபாவை திருடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை ஒருவர் நேற்று (04) கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.தெனியாய […]

இலங்கை

இலங்கை : சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு!

  • February 5, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.