பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறியர்களுக்கு தொழில் வழங்கினால் 60,000 பவுண்ட் அபராதம்
பிரித்தானியாவில் சரியான விசா இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் அல்லது ஆதரிப்பவர்களுக்கான அபராதம் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வேலை மற்றும் தங்குமிடங்களை வழங்கும் வணிக நிலையங்கள் மற்றும் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் அபராதங்களை எதிர்கொள்ளவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முறையான விசா இல்லாமல் புலம்பெயர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் வழங்குனர்களுக்கு 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். தொழில் வழங்குனர்களின் முதலாவது மீறலுக்கு ஒரு பணியாளருக்கு 45,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறுவது […]













