இந்தோனேசியாவில் விமான சேவைகள் முடக்கம் – 30000 பயணிகள் தவிப்பு
இந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் எரிமலை, வெடிப்பின் தாக்கம் காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக நேற்றைய தினம் சுமார் 340,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது.
ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
இதனால் சுமார் 3000 விமானங்கள் நேற்றைய தினமும் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறவும், எப்போது பயணிக்க முடியும் என்பது குறித்த தகவல்களைப் பெறவும் முயன்றதால், விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




