நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதித்து மசோதா நிறைவேற்றியது தென்கொரியா
நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை, தென்கொரிய நாடாளுமன்றம் இன்று(9) நிறைவேற்றி உள்ளது. நாய்க்கறி உண்பதை வழக்கில் பின்பற்றும் வெகுசில நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவும் இருந்து வருகிறது. தலைமுறை இடைவெளியில் நாய்க்கறி உண்பது தென்கொரியர்கள் மத்தியில் குறைந்து வந்தது. செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பது, விலங்கு மீதான அதிகரிக்கும் அபிமானம், மேற்கு நாடுகளின் தாக்கம் ஆகியவை காரணமாக தற்போதைய தலைமுறையினர் மத்தியில் நாய்க்கறி தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனபோதும் பிராய்லர் கோழிகள் போல, […]













