ஹூதியின் தொடர் தாக்குதல் – சீனாவிடம் உதவிக் கோரிய சவுதி அரேபியா
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் காரணமாக சவூதி அரேபியா சீனாவிடம் உதவிக் கோரியிருந்தது.
இந்நிலையில் ஹூதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா தனிப்பட்ட முறையில் தெஹ்ரானிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக விவரத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் கூறியுள்ளது.
செங்கடல் கடற்கரை மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதிகளில் ஹூதிகள் வேகமாக முன்னேறியதைத் தொடர்ந்து சவூதி அரேபியா சீனாவின் உதவியை நாடியது.
இத்தகைய முன்னேற்றங்கள் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிக ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா பெரிதும் சார்ந்திருக்கும் எரிசக்தி விநியோகப் பாதைகளில் மோதல் மேலும் பரவுவதைத் தடுக்க, ஹூதிகள் மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.




