அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பன நீதித்துறையின் சுயாதீனத்தையே பிரதானமான விடயமாகக் கருதுவார்கள்.

நீதித்துறையின் சுயாதீனம் குறித்துச் சந்தேகம் எழுந்தால், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வராது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும்.

எனவே, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டால், அது வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் ஜி.எல்.பீரிஸ் .

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை