பூமியின் நீர் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் – நீர் இருப்பு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டு
பூமியின் நீர் சுழற்சி மிகவும் சீரற்றதாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘எல் நினோ’ (El Niño) நிகழ்வு இந்த நீண்டகாலப் போக்கை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் உலக ஆறுகளின் நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்த ஆண்டுகளில் 2025-ம் ஆண்டும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) தெரிவித்துள்ளது.
2025-ல், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பனிப்பாறைகள் சுருங்கியுள்ளன; அதேவேளையில், உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருவதாக WMO வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், WMO-வின் ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை’ (State of Global Water Resources) குறித்த வருடாந்திர அறிக்கை, பூமியின் நன்னீர் சேமிப்பு, அதாவது நிலத்தடி நீர், ஏரிகள், ஆறுகள், மண் ஈரப்பதம், தாவரங்கள் மற்றும் பனி ஆகியவற்றில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீர் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




