இலங்கை

இலங்கையில் நீர் கட்டணமும் குறைக்கப்படும் – ஜீவன் தொண்டமான்!

  • January 11, 2024
  • 0 Comments

மின் கட்டணத்தில் எதிர்பார்க்கப்படும் குறைப்புடன், நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று (11.01) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. “இனிமேல் தண்ணீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. தண்ணீரை […]

இலங்கை

மலையகத்தில் விறகு தேடிச்சென்றவர் ஓடையொன்றிலிருந்து சடலமாக மீட்பு..!

  • January 11, 2024
  • 0 Comments

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில் தோட்டம் 2 ம் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய சுப்புன் நாமல் என்பவர் புதன்கிழமை (10) மதியம் 11 .30 மணியளவில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பாததால் இது தொடர்பில் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளார். அதற்கமைய பொலிஸார் ஈடுபட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கெனில் தோட்டம் 2 ம் பிரிவு வன பகுதியில் உள்ள ஓடையொன்றிலிருந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் இன்று 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • January 11, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய நகரங்களில் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினர். அதேபோல் இந்தியாவில் வட மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து […]

வட அமெரிக்கா

கியூபாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி… 500 சதவீதம் உயரவுள்ள பெட்ரோல் விலை!

  • January 11, 2024
  • 0 Comments

கியூபாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோலின் விலையை 500 சதவீதம் உயர்த்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்கா அருகில் உள்ள குட்டித் தீவான கியூபாவில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்திற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உள்நாட்டில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பெரும்பான்மையான சேவைகள் அரசு சார்ந்தது என்பதால் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் […]

உலகம்

போதிய பயிற்சி இல்லாத ரஷ்ய இராணுவம் : பிரித்தானியா எச்சரிக்கை

கடந்த வாரத்தில் ரஷ்யா தற்செயலாக ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இரண்டு முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இது ரஷ்யாவின் “போதுமான பயிற்சி மற்றும் பணியாளர்களின் சோர்வு ஆகியவற்றால் தவறுகள் அதிகமாக இருக்கலாம்” என்று பிரித்தானிய தெரிவித்துள்ளது. போதிய பயிற்சி இல்லாதது ரஷ்ய இராணுவத்திற்கும், விமான மற்றும் தரைப்படைகளுக்கும் நீண்ட காலமாக ஒரு பிரச்சினையாக உள்ளது, மேலும் உக்ரைனில் நடந்த போரின் போது பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. மற்றும் போர் நீடித்து வருவதால் ரஷ்ய வீரர்கள் […]

இலங்கை

பப்புவா நியூ கினியாவில் இடம்பெற்ற மோதலில் 08 பேர் பலி!

  • January 11, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கொள்ளையினால் 08 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பள பிரச்சினை காரணமாகவே அந்நாட்டு பொலிஸார் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரே இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடைகள், பல்பொருள் அங்காடிகளை சூறையாடியும், வாகனங்களை எரித்தும் நகரவாசிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஜேம்ஸ் மாரப், சட்டத்தை மீறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார். நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், […]

இலங்கை

இலங்கை வந்தடைந்த ஜப்பானிய நிதியமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் வரவேற்றார். 2024 ஜனவரி 11 முதல் 12 வரை ஷுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்கும் நேட்டோ நாடு

லிதுவேனிய அதிகாரிகள் உக்ரைனுக்கு 200 மில்லியன் யூரோ இராணுவ உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர் ஜனவரியில் உக்ரைன் வெடிமருந்துகள், ஜெனரேட்டர்கள் மற்றும் வெடிக்கும் அமைப்புகளையும், பிப்ரவரியில் M577 கவசப் பணியாளர் கேரியர்களையும் அனுப்புவதற்கான திட்டங்களை லிதுவேனியன் ஜனாதிபதி, Gitanas Nausėda , புதன்கிழமை வில்னியஸில் Zelenskiy உடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார் . “துணிச்சலான உக்ரேனியர்களின் போராட்டத்தில் இராணுவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என எல்லா வகையிலும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்,” […]

பொழுதுபோக்கு

என்னடா இது? அயலானுக்கு வந்த சோதனை… கடைசி நேரத்தில் பிரச்சினை..

  • January 11, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயலான் நாளை (ஜன.12) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கிவிட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் அயலான் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் 5 ஆண்டுகளில் பல பிரச்சினைகளை கடந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 24 AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. கொரோனா ஊரடங்கும் […]

ஆசியா

இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு விசாரணை ஆரம்பம்

இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டி சர்வதேச நீதிமன்றம் வாதங்களைக் கேட்கும் நிலையில், காசாவில் போர் தொடர்பான சட்ட விசாரணை ஹேக்கில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. . தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு தற்காலிக நீதிபதிகள் தங்கள் ஆணித்தரமான அறிவிப்புகளுடன் இந்த வழக்கு தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த டிக்காங் மொசெனெகேவும் , நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் அஹரோன் பராக் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்தவும் உள்ளனர். காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் […]