இலங்கை

முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் இலங்கை!

  • September 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், தேசிய டிஜிட்டல் பொருளாதார […]

ஐரோப்பா

திடீரென மாயமான விளையாட்டு வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம்

  • September 10, 2023
  • 0 Comments

காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் கடந்த மாதம் குரோஷியாவில் காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜிய தஞ்சம் மற்றும் இடம்பெயர்வுக்கான பெல்ஜிய மாநில செயலாளர் நிக்கோல் டி மூரின் கூற்றுப்படி, குரோஷியாவின் ரிஜெகா நகரில் 9ஆம் திகதியன்று காணாமல் போன சில இளம் விளையாட்டு வீரர்கள், முன்னாள் காலனித்துவ சக்தியான பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பங்களை தாக்கல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI உதவியுடன் ஊடுருவும் சீன – வடகொரிய ஹேக்கர்கள்! எச்சரிக்கும் மைக்ரோசாப்ட்

  • September 10, 2023
  • 0 Comments

புதிய அச்சுறுத்தல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஊடுருவும் சீன மற்றும் வடகொரிய ஹேக்கர்களால் எழுந்துள்ள பிரச்சினையைடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. “மைக்ரோசாப்ட் த்ரெட் அனாலிசிஸ்” மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் வங்கிகள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றின் கணினி வலைப்பின்னலை ஊடுருவி, தனிப்பட்ட தகவல்கள் திருட்டு முதல் நிதி ஆதாரங்கள் சுரண்டல் வரை சீன ஹேக்கர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன. தற்போது அந்த […]

இலங்கை

சனல் 4 தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவிப்பு

  • September 10, 2023
  • 0 Comments

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட் தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு

  • September 10, 2023
  • 0 Comments

இரத்மலானை – ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. வாகனங்களில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர், வீடொன்றிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுக்காகப் போரிட கியூபாவிலிருந்து ஆட்கடத்தல்

  • September 10, 2023
  • 0 Comments

உக்ரேன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட கியூபா மக்களைக் கடத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை ஈடுபடும் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. போரில் ரஷ்யப் படைகளில் சேர்ந்துகொள்ளுமாறு கியூபர்களை ஈர்க்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபட்டது. கும்பலை உடைத்து செயலிழக்கச் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அறிக்கையில் வெளியுறவு அமைச்சு அதிகத் தகவல்களை வெளியிடவில்லை. ஆட்கடத்தல் கும்பல் கியூபா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இரு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் புதிய ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லிஸ்டீரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 25 லிஸ்டீரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணித் தாய்மார்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்களில், நீரிழிவு இதய-கல்லீரல் அல்லது சிறுநீரக நோயாளிகளுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும். உண்ணும் உணவோடு தொடர்புடைய பாக்டீரியா தொற்றுதான் இந்த நோய்க்கு மூலகாரணமாக இருப்பதுடன், தனிநபர்களின் […]

வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! 2000த்தை கடந்த மரணங்கள்

  • September 10, 2023
  • 0 Comments

மொரோக்கோவின் மத்தியப் பகுதிகளை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது. காயமுற்றோர் எண்ணிக்கையும் 2000க்கும் மேல் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. மொரோக்கோவின் அரச மாளிகை 3 நாள்களுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கும்படி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சுத்தமான குடிநீர், உணவு, கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளின் ‘I’m not a robot’ எதற்காக?

  • September 10, 2023
  • 0 Comments

பல சமயங்களில் கூகுளின் உள்ளே சில வலைதளங்களுக்குள் நாம் நுழையும்போது, I’m not a robot என்பதை கிளிக் செய்யுமாறு கேட்டிருக்கும். இதையும் நாம் கிளிக் செய்துவிட்டு அந்த வலைதளத்திற்குள் நுழையும் வேலையை நாம் பார்ப்போம். ஆனால் இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தற்போது உலகமெங்கும் கூகுளைத் தான் அதிகம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கூகுளில் நாம் ஏதாவது தேடும் போதோ, அல்லது ஏதாவது வலைதளத்துக்குள் நுழையும் போதோ I’m […]

உலகம்

எதிர்பார்த்ததை விட வேகமாக உருகும் அண்டார்ட்டிக்கா பனிப்படலங்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

  • September 10, 2023
  • 0 Comments

அண்டார்ட்டிக்கா பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள பனிப்படலம் வேகமாக உருவாக ஆரம்பித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் அவை உருகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் உலகளவில் கடல்நீர் மட்டம் உயரக்கூடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். முன்னைய ஆய்வுகளில் சொல்லப்பட்டதைவிட வேகமாகப் பனிப்படலங்கள் உருகிவருவதாக ஆய்வொன்று கூறுகிறது. 78 பனிப்படலங்களின் விவரங்களைத் தொகுத்து கடந்த 1,000 ஆண்டுகளில் அவற்றின் தட்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். துருவங்களுக்கு அருகே இருக்கும் பகுதிகள், பூமியின் மற்ற பாகங்களைவிட மிக வேகமாக […]