பொழுதுபோக்கு

லியோ இலங்கையில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • October 20, 2023
  • 0 Comments

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்றாலே அது மாஸ் தான். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் மாபெரும் வெற்றியடைய அதை தொடர்ந்து தற்போது லியோ வெளியாகியுள்ளது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும், பல கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் லியோ தாறுமாறாக சாதனை செய்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். முதல் நாள் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது […]

இலங்கை

ஜா அல பகுதியில் மாயமான சிறுமி!

  • October 20, 2023
  • 0 Comments

ஜா அல, ஏகல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். கோஷிலா ரோஷன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும்,  12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார். குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அல்ஜீரியா செய்துள்ள செயல்..

  • October 20, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 07ம் திகதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக தொடரும் இந்த போரில் இரு தரப்பினரும் சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 7000 பேர் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருகின்றன இதற்கிடையே காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் […]

மத்திய கிழக்கு

லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

  • October 20, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள கிரியாத் ஷ்மோனா நகரில் உள்ள மக்களை  வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. லெபனானில் இஸ்ரேலிய துருப்புக்களும் போராளிகளும் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டிருக்கும் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்தில் வசிப்பவர்கள் அரசு மானியம் பெறும் விருந்தினர் மாளிகைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரியாத் ஷ்மோனாவில் 20,000க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளனர்.  இந்த வார தொடக்கத்தில் எல்லையில் இருந்து இரண்டு கிலோமீட்டர்களுக்குள் இருந்த 28 சமூகங்கள் இஸ்ரேலால் வெளியேற்றப்பட்டுள்ளன.

இலங்கை

தலவாக்கலை- மின்பிறப்பாக்கி புகையால் 10 பேர் பாதிப்பு

  • October 20, 2023
  • 0 Comments

தலவாக்கலை நகரில் இயங்கும் ஆடையகத்தில் பணியாற்றி வரும் பத்து பேருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை நகரில் மின்சாரம் துன்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆடையகத்தில் மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயக்கப்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் ஆடையகத்தில் பணியாற்றிய 9 பெண்கள் உட்பட ஆண் ஒருவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளதுடன் அதிகமாக இருமலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்களை லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த பின் மேலதிக சிகிச்சைக்காக இவர்கள் […]

உலகம்

அமெரிக்காவிடம் இருந்து அதிக உதவிகளை பெற்றுக்கொண்ட இஸ்ரேல்‘!

  • October 20, 2023
  • 0 Comments

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிடமிருந்து அதிக போர் உதவிகளைப் பெற்ற நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது.  அந்த நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு சுமார் 158 பில்லியன் டொலர்களை வழங்கியது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2019 முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டொலர் இராணுவ உதவியை இஸ்ரேல் பெற்றது. அதன்படி இந்த வருடத்திற்கு 3.8 பில்லியன் டொலர்கள் இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிப்ரவரி 2022 இல் […]

செய்தி

முல்லைத்தீவில் பொதுமுடக்கம்! பல சேவைகள் ஸ்தம்பிதம்!

  • October 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல […]

இலங்கை

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – வழமைபோன்று இயங்கும் சேவைகள்

  • October 20, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்ட ஹர்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் ஏனைய சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று இயங்குவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது போக்குவரத்துகள் அனைத்தும் இயங்குவதை காணமுடிகின்றது. வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்றுத்தல் ஆகியவற்றினை கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் இன்று ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று […]

இலங்கை

முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஆதிவாசிகள்!

  • October 20, 2023
  • 0 Comments

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு (21, 22.10.2023) ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

முற்றாக முடங்கியது புதுக்குடியிருப்பு நகர்

  • October 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும் , நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது. அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் உணவகங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொதுசந்தை முழுமையாக முடங்கிய நிலையில் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.