இலங்கை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்க துரித நடவடிக்கை!

  • October 22, 2023
  • 0 Comments

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வெளிநாட்டுக் கடனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக […]

இலங்கை

இலங்கையில் ஒரே குடும்பத்தை இலக்குவைத்து துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்!

  • October 22, 2023
  • 0 Comments

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் நேற்று (21.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் நான்கு மாதக் குழந்தை காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 07.30 அளவில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் உரகஹா வீதியில் உள்ள கல்வெஹெர பாடசாலைக்கு அருகில் […]

இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா-மஸ்தான் MP-ன் செயல்பாடு குறித்து விசனம்

  • October 22, 2023
  • 0 Comments

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.இவ்விடையம் தொடர்பாக […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் வீசிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்திய ஐயன் டோம்…

  • October 22, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் வீசிய ராக்கெட்டை ஐயன் டோம் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போர் விதிமுறைகளுக்கு மாறாக, இரு தரப்புமே பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹமாஸ் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஐயன் […]

இலங்கை

லெபனாலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

  • October 22, 2023
  • 0 Comments

லெபனானில் அண்மையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இலங்கை பெண் ஒருவரும் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் நேற்று (21.10) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒலித்த குரல்!

  • October 22, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். காசா பகுதியை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் யூத சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் – கிழக்கு முன்னாள் ஆளுநர்

  • October 22, 2023
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. திம்புலாகல பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது ” என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு, திம்புலாகல சிங்கள […]

பொழுதுபோக்கு

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்தார் சித்தாரா

  • October 22, 2023
  • 0 Comments

பிரபல சினிமா நடிகையான சித்தாரா புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். அந்த தொடருக்கான புரோமோ அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பூவா தலையா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தாரா, லதா ராவ், ஸ்வேதா ஷ்ரிம்படன் மற்றும் பாண்டி கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக தமிழ் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, காவேரி மகள், பராசக்தி ஆகிய தொடர்களில் சித்தாரா நடித்திருந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூவா தலையா தொடரின் […]

வாழ்வியல்

ஒற்றைத் தலைவலியை தீர்க்கும் ஆற்றல் கொண்ட உணவுகள்!

  • October 22, 2023
  • 0 Comments

ஒற்றைத் தலைவலி ஒருவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில், இதிலிருந்து விடுபட உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சனை வாழ்க்கையை முடக்கி போடும் திறன் கொண்டது. இதிலிருந்து விடுபட சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். பச்சை இலைக் காய்கறிகளில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் சத்து ஒற்றை தலைவலிக்கு தீர்வை அளிப்பதோடு, நல்ல மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு செயல்பாட்டை […]

செய்தி

இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகமாகும் கட்டணம்

  • October 22, 2023
  • 0 Comments

இத்தாலியில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டினர், நாட்டின் தேசிய சுகாதார சேவையைப் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு 2,000 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும் என்று இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் விளக்கியது போல், கட்டணங்கள் 2024 வரவு செலவு திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நாடு அத்தகைய கட்டணத்தை அறிமுகப்படுத்தும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இருந்த போதிலும், சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் ஒரு இளம் வெளிநாட்டு நபர் ஆகியோருக்கு வெளியிடப்படாத தள்ளுபடிகள் கட்டண […]