ஐரோப்பா

சுவிஸின் அழகிய கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவு – மக்கள் வெளியேற்றம்

சுவிட்சர்லாந்தில் கிராமமொன்று நிலச்சரிவு அபாயம் காரணமாக மக்களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள காண்டர்ஸ்டெக் Kandersteg கிராமத்தில் உள்ள 1300 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பிட்ஸே ஸ்டெய் Spitze Stei எனப்படும் மலைப்பக்கப் பாறை அமைப்பானது, ஒரு மாபெரும் நிலச்சரிவின் மூலம் பள்ளத்தாக்கில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 15-20 மில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த பாறை சரிந்தால் மிகப் பெரிய பேரிடர் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்