உலகம் செய்தி

விண்வெளிக்குச் சென்ற சீனாவின் இளம் விண்வெளி வீரர்கள்

  • October 26, 2023
  • 0 Comments

2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனாவின் முயற்சியின் விளைவாக இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இளைய குழுவினர் கிடைத்துள்ளனர். அதன்படி, வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஷென்சோ 17 விண்கலத்தில் அவர்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது. லாங் மார்ச் 2-எஃப் என்ற ராக்கெட்டின் உதவியுடன் அவர்கள் விண்வெளிக்கு பயணமாகியுள்ளனர். இந்த விண்வெளி வீரர்கள் 38 வயதுடையவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் நடைபெற்ற தீப்பந்த போராட்ட பேரணி

  • October 26, 2023
  • 0 Comments

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இன்று இரவு இப் போராட்டம் நடைபெற்றது. யாழ் நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. இப் போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆணரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து […]

இலங்கை செய்தி

காஸா பகுதியில் பாரிய நில ஆக்கிரமிப்புக்கு தயாராகும் இஸ்ரேல்

  • October 26, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் பாரிய நில ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸாவில் உள்ள இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் இதுவரை அகற்றப்படாத பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த அனுல ரத்நாயக்க ஜயதிலகவின் சடலம் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமய நிகழ்வுகளின் பின்னர் […]

ஐரோப்பா செய்தி

ட்ரோன் உதிரிபாகங்களை ரஷ்யாவிற்கு விற்ற ஜெர்மனி நாட்டவர் கைது

  • October 26, 2023
  • 0 Comments

உக்ரைனில் தற்போது மாஸ்கோவின் துருப்புக்களால் பயன்படுத்தப்பட்டுள்ள ட்ரோன்கள் உட்பட இராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் பாகங்களை ரஷ்யாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபரை ஜெர்மனி கைது செய்துள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பெயரிடப்படாத மத்திய நகரமான காசெலைச் சேர்ந்த சந்தேக நபர், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு பல்வேறு மின்னணு பாகங்கள், மாதிரி விமான இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத் தடைகளைத் தவிர்க்கும் முயற்சியில் ஹாங்காங்கில் உள்ள […]

இலங்கை செய்தி

இலங்கையின் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்பு

  • October 26, 2023
  • 0 Comments

இலங்கையின் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். பக்கவாதத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் இயக்குநரகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். உலக பக்கவாதம் தினம் அக்டோபர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. நோய் தடுப்பு என்பது […]

இலங்கை செய்தி

காஸாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்

  • October 26, 2023
  • 0 Comments

காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பெனட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக் குவழங்கிய நேர்காணலில், காஸாவில் உள்ள மக்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்திடம் குறிப்பிட்ட தகவல்கள் இருப்பதாக பலஸ்தீனத்துக்கான அவர் தெரிவித்துள்ளார். எகிப்து நோக்கிய ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்ட போதிலும், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் இன்னும் அதன் வழியாக வெளியேற […]

இலங்கை செய்தி

அரசு கொண்டு வர முயற்சிக்கும் புதிய சட்டங்கள்

  • October 26, 2023
  • 0 Comments

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், தற்காலத்துக்கு இணக்கமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாறும் போது மாறாத நிலையான கொள்கைகளை ஒவ்வொரு துறையிலும் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதன் ஒரு கட்டமாக ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார். நாட்டில் நிதி ஒழுக்கம் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச […]

இலங்கை செய்தி

யாழில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

  • October 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், […]

செய்தி வட அமெரிக்கா

ஏதென்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு

  • October 26, 2023
  • 0 Comments

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய புதிய பூங்கா வேலைத் தளத்திற்கு அருகே இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது, ஏதென்ஸுக்கு தெற்கே 15 கிலோமீட்டர் (ஒன்பது மைல்) தொலைவில் உள்ள ஹெலினிகோன் தளத்தில் நடந்த நடவடிக்கை, தலைநகரின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றை சுமார் இரண்டு மணி நேரம் மூடப்பட்டு நான்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை வெளியேற்றத் தூண்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் 500 பவுண்டுகள் (227 […]

இந்தியா செய்தி

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு

  • October 26, 2023
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி வயது 52 விவசாயம்செய்து வருகிறார். இவர் நேற்று இரவு இவரது மனைவி அம்பிகா வயது 47 உடன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார்.அப்போது பெரியசாமி மோட்டார் கிளப்புவதற்காகமோட்டார் பட்டனை ஆன் செய்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது அவரது மனைவி அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யப்போது அவரையும் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]