உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை ஏவப்பட்டதாக  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் சண்டை தொடர்பாக ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் உள்ள வெள்ளைக் கடலில் உள்ள நீருக்கடியில் இருந்து ஏவப்பட்டது, ரஷ்ய தூர […]

இலங்கை

தெதுறு ஓயாவின் வான் கதவுகள் திறப்பு!

  • November 5, 2023
  • 0 Comments

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்காலத்தில் தற்போதைய நீர் கொள்ளளவை விட அதிக நீர் கொள்ளளவை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெதுரு ஓயா நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்  விராஜ் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கை

ஆறு மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அது மேலும் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பின்வரும் […]

இலங்கை

இலங்கை முழுவதும் மீண்டும் போராட்டங்கள் இடம்பெறலாம் என புலனாய்வினர் தகவல்!

  • November 5, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகளும், அமைப்புகளும் தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத்தின் நடுத்தரப் பகுதியில் இருந்து போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு,  எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு,  அடுத்த ஆண்டு முதல் வட் வரி உயர்வு,   அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுகாதார சேவை குறைபாடுகள்  என பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையான அறிக்கை அரசுக்கு […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல், மணிரத்னம்.. ட்ரெண்டாகும் புதிய புகைப்படம்

  • November 5, 2023
  • 0 Comments

KH 234 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலும், மணிரத்னமும் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது. அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதைடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த இந்தியன் 2 படம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. அதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன. இன்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை […]

இலங்கை

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி!

  • November 5, 2023
  • 0 Comments

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தின் இறுதியிலும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

இத்தாலியில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய இத்தாலியப் பகுதியான டஸ்கனியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இதுவரை ஏழுபேர் உயிரிழந்த்துள்ளனர். டஸ்கனியில் சுமார் 300 பேர் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பேரழிவு ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் € 300 மில்லியன் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ ஆரம்ப 5 மில்லியன் யூரோக்களை இத்தாலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

மத்திய கிழக்கு

இஸ்ரேல் ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட காசவின் அல்-அசார் பல்கலைக்கழம் ;இணையத்தில் வெளியான வீடியோ

  • November 5, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தை இஸ்ரேலிய ராணுவம் ஒட்டுமொத்தமாக தரைமட்டம் ஆக்கியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மொத்தமாக அழிப்பதற்காக காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் தரைப்படைத் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து அழிப்பதற்காக இஸ்ரேலிய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.மேலும் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்து தரை, வான், மற்றும் கடல் என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. […]

இலங்கை

யாழில் வீடொன்றில் திருடு போன 135 பவுணுக்கும் அதிகமான தங்கநகைகள்

  • November 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருட்டு போயுள்ளது.அந்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை. இந்நிலையில் தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த […]

இலங்கை

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தால் இலங்கைக்கு வருடாந்தம் 20 பில்லியன் ரூபா இழப்பு

இலங்கைக்கு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் காரணமாக 17 – 20 பில்லியன்.ரூபா வருடாந்த இழப்பு ஏற்படுவதாக Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, காட்டு விலங்குகளினால் ஏற்படும் சேதங்களினால் வருடாந்தம் 31,000 மெற்றிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைகள் இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், வன விலங்குகளால் பயிர் சேதத்தை தடுப்பதற்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் […]