பொழுதுபோக்கு

தலைவர் 171 கதை இதுதான்.. கெளதம் மேனன் கூறிய ட்விஸ்ட்

  • November 18, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்தது. அதன்படி, ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் காம்போ முதன்முறையாக இணையும் தலைவர் 171 […]

இலங்கை

யாழ்.பேருந்துகளில் பயணிகளிடம் கைவரிசையை காட்டிய மூவர் கைது…!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று […]

இலங்கை

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

  • November 18, 2023
  • 0 Comments

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவில்,  தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஷ குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி […]

இலங்கை

முல்லைத்தீவிற்கு தெற்காக உருவாகியுள்ள காற்று சுழற்சி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • November 18, 2023
  • 0 Comments

இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் தெரிவித்த அவர்,  “வட கிழக்கில் இன்று (18.11) தொடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்  இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில்  இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக […]

இந்தியா

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – திருமாவளவன்!

  • November 18, 2023
  • 0 Comments

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான்  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மற்ற எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் […]

இலங்கை

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : 27 வயது இளைஞர் உயிரிழப்பு!

  • November 18, 2023
  • 0 Comments

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று (18.11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,   ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த நபர்  எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கராயன் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணியாற்றிய 27 வயதான இளைஞர் […]

இலங்கை

கிரிக்கெட் மட்டையால் கணவனுக்கு நேர்ந்த விபரீதம் : மனைவி கைது

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தலையில் பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

திருகோணமலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நவராசா கோவண்ணன் மாவட்டத்தில் முதல்நிலை

  • November 18, 2023
  • 0 Comments

2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் திருகோணமலை கல்வி வலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 2300 மாணவர்களில் 293 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அத்துடன் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.

இலங்கை

இலங்கையில் தேங்காய் திருடிய நபருக்கு நேர்ந்த சோகம்!

  • November 18, 2023
  • 0 Comments

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை காவலாளி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கட்டானைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

மணி- ரவீனா ரெண்டு பேரும் பாத்ரூமுக்குள்ள!! சி..சி.. அர்ச்சனா வைத்த பகீர் குற்றச்சாட்டு

  • November 18, 2023
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு மேலே சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தற்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள்ளே பெரிய விவாதம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே பல இடங்களில் ரவீனா மற்றும் மணி இருவரும் சேர்ந்து பழகுவதை குறித்து சக போட்டியாளர்களே பேசி இருக்கின்றனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். […]