உலகம்

அமெரிக்க கடற்படை விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது!

  • November 21, 2023
  • 0 Comments

அமெரிக்க கடற்படை விமானம் ஓடுபாதையை கடந்து ஹவாயில் உள்ள விரிகுடாவில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக குறித்த விமானத்தில் பயணித்த 09 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனோஹே விரிகுடாவில் உள்ள கடல் தளத்தில் P-8A விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதாக அமெரிக்க மரைன் கார்ப்ஸ் செய்தித் தொடர்பாளர் கன்னெரி சார்ஜென்ட் தெரிவித்தார். P-8A பெரும்பாலும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடவும் உளவு மற்றும் உளவுத்துறை சேகரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது போயிங்கால் தயாரிக்கப்பட்டது.

பொழுதுபோக்கு

த்ரிஷாவுடன் மீண்டும் இணைவேன்.. அடங்காத மன்சூர் அலிகான்

  • November 21, 2023
  • 0 Comments

த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான் மீண்டும் த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியும் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவை போட […]

உலகம்

OpenAI – இன் தலைவரான சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்!

  • November 21, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகின் முன்னணி நிறுவனமான “OpenAI”-இன்   இணை நிறுவனராகவும் தலைவராகவும் இருந்த சாம் ஆல்ட்மேனை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நீக்கியுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் 95% ஊழியர்கள் இயக்குநர் குழுவுக்கு கடிதம் அனுப்பி, இயக்குநர்கள் குழு பலவீனமாக உள்ளதாகவும், இந்த முடிவால் தங்கள் நிறுவனத்தின் விவகாரங்கள் சீர்குலைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தங்கள் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வார இறுதியில் ஆல்ட்மேன், நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சிப் பிரிவின் […]

இலங்கை

இலங்கை மின்சாரத் துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்|!

  • November 21, 2023
  • 0 Comments

முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்திற்கு நேற்று (20.11) பிற்பகல் கூடிய அமைச்சர்கள் அங்கீகாரம் வழங்கியதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதன்படி, புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்த புதிய மின்சாரச் சட்டம் திட்டமிட்டுள்ளது. புதிய சட்டம் மின்சார உற்பத்தி, […]

ஐரோப்பா

கனடாவில் ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துவது குறித்து வெளியான தகவல்!

  • November 21, 2023
  • 0 Comments

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கனடாவில் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்  கனேடிய அதிகாரிகள் நாஜி “ஸ்வஸ்திகா” சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக நகர்ந்துள்ளனர்.  இது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போன்ற தலைவர்களால் கண்டிக்கப்பட்டது. இது இந்துக்களின்  புனித சின்னத்துடன் இணைக்கப்படுவதைத் தடுக்க, இந்தோ-கனடிய சமூக அமைப்பு “ஸ்வஸ்திகாவை மீட்டெடுக்க” பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. யூத ஜெப ஆலயங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் வணிகங்கள்  குறிவைக்கப்பட்ட போது நாஜி […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஒட்டுமொத்த இணையவாசிகளுக்கும் கவர்ச்சி விருந்து போட்ட திஷா பதானி…. ஹாட் ஹாட் போட்டோ சூட்

  • November 21, 2023
  • 0 Comments

2016ல் பாலிவுட்டில் தோனியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி என்ற படத்தில் பிரபலமானவர் திஷா பதானி. அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் ‛‛பாஹி-3, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே” என பல படங்களில் நடித்தார். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‛கங்குவா’ படம், பிரபாஸ் – கமல் – அமிதாப் பச்சன் நடித்து வரும் ‛கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான […]

ஆசியா

ஆப்கானிஸ்தானை அதிரவைத்த நிலநடுக்கம் – அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்!

  • November 21, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென 4.1 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் அதிர்வை மட்டுமே ஏற்படுத்தி செல்கின்றன. இருப்பினும் சில நிலநடுக்கங்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தூக்கத்தில் இருந்தவர்கள் […]

பொழுதுபோக்கு

மன்சூர் அலிகான் சர்ச்சை; தெலுங்கு தேசத்திலிருந்தும் வந்தது கண்டனம்

  • November 21, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். அது போல தற்போது தெலுங்குத் திரையுலகினரும் த்ரிஷாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்கள். மூத்த நடிகரான சிரஞ்சீவி, “த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்திற்கு வந்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பான ஒன்றாகும். இந்தக் கருத்துக்களை […]

ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 பேருக்கு நேர்ந்த கதி

  • November 21, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்கா சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் 10 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ராணுவ அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராம பகுதிகள் உள்ளது. இந்த சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்காக அங்கிருந்தவர்கள் சிலர் தோண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான […]

இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தில் அமைதியின்மை – 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

  • November 21, 2023
  • 0 Comments

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரித்த நிலையில் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.