மட்டக்களப்பு- பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்து விற்பனை: நீதிமன்றம் பிரயோகித்த உத்தரவு
மட்டக்களப்பு நகரில், விற்பனை செய்யப்பட்டு வந்த பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்ட பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் உட்பட இருவரை 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் குறித்த பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டார். அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த […]













