தமிழ்நாடு

தமிழகத்தில் கஞ்சா போதை வெறியில் தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

  • November 24, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் – கஸ்தூரி தம்பதியின் இளைய மகன் சேவாக் (21).சேவாக்கின் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியாக பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று […]

இலங்கை

சேதவத்த பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிப்பு!

  • November 24, 2023
  • 0 Comments

ஜா-எல பகுதியில் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய தானும் ஆற்றில் குதித்த போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது  

ஆசியா

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு முதுகில் அறுவை சிகிச்சை!

  • November 24, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானுக்கு நேற்று முதுகில் அறுவை சிகிச்சை மோற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தம் 9 லீக் போட்டிகள் விளையாடியது. இதில், 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இருந்தது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் […]

இலங்கை

குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

  • November 24, 2023
  • 0 Comments

குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் த.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (22) அன்று கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் சென்று கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவினுள் உள்ள தனியார் விடுதியில் வைத்து குறித்த உப பொலிஸ் பரிசோதகரை குடும்ப […]

பொழுதுபோக்கு

இதுக்கு பேர் தான்யா பெரிய மனசு.. த்ரிஷா மேம் உங்களுக்கு ஒரு சல்யூட்

  • November 24, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியிருந்தார். இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்டார். இதனையடுத்து தற்போது மன்சூர் அலிகானை மன்னிப்பதாக த்ரிஷாவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார் மன்சூர் அலிகான். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், இறுதியாக “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” […]

இலங்கை

இலங்கை – முன்னாள் ஜனாதிபதி உயிர் அச்சுறுத்தல்: சந்தேகநபர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரிவெல பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சென்று, மஹிந்தவை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆசியா

புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்

  • November 24, 2023
  • 0 Comments

சீனாவில் மர்ம காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை கேட்ட நிலையில், அதற்கு சீன அரசு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. மேலும் சுவாச பிரச்சினைகளையும் பலர் எதிர்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 13ம் திகதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிவித்தனர். மேலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் நச்சுக் காற்று 500,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு

2021 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நச்சுக் காற்று காரணமாக 500,000 க்கும் அதிகமான மக்களைக் உயிரிழந்துள்ளனர் என ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் தரவு வெளியீட்டியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்கு மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் பாதி இறப்புகளைத் தவிர்க்கலாம் என்று ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அதிகபட்ச வழிகாட்டுதல் வரம்புகளை மீறிய PM2.5 எனப்படும் நுண்ணிய நுண் துகள்களின் செறிவு காரணமாக 253,000 ஆரம்பகால மரணங்களுக்குக் காரணம் என ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். […]

பொழுதுபோக்கு

“விடாமுயற்சி”க்கு என்ன ஆச்சி? திடீரென சென்னை திரும்பிய அஜித்… ட்ரெண்டாகும் வீடியோ

  • November 24, 2023
  • 0 Comments

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. விடாமுயற்சி படத்தை ஓரிரு ஷெட்யூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பித்திருக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங், ரொம்பவே தாமதமாக தொடங்கியது. அதாவது விக்னேஷ் சிவனுக்குப் பதில், மகிழ் திருமேனி […]

இலங்கை

இந்திய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை ஜனாதிபதி

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை விமர்சித்த இந்திய அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். “இந்தியர்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா எங்கள் சாதனையை விமர்சித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்று விக்ரமசிங்க First post.க்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியுள்ளார். இதன்போது அவர்மேலும் தெரிவித்த்துள்ளதாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்பதை […]