கருத்து & பகுப்பாய்வு

ஜனாதிபதியின் திருகோணமலை முதலீட்டு வலயம் யாருக்கு உதவப்போகிறது ?

1000 ஏக்கர் நிலப்பரப்பில் திருகோணமலை பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்று விரைவில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு இந்தியாவின் உதவி பெறப்படுமென்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது மாவட்டத்துக்கு ஆபத்தான திட்டமா? அன்றி அபிவிருத்தியை ஏற்படுத்த கொண்டுவரப்படும் நேர்மையானதிட்டமாக இருக்குமா என்பது பற்றி மிக தெளிவாக சிந்திக்கவேண்டியவர்களாக வாழும் தமிழ் மக்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை கடந்த வியாழக்கிழமை (24.8.2023) ஜனாதிபதியவர்கள் சீனக்குடா விமான படைத்தளத்தில் நடத்தியிருக்கிறர். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் […]

இந்தியா

ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்த பொலிஸ்.. ஆத்திரத்தில் லைன்மேன் செய்த செயல்!

  • August 27, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த பொலிஸை பழிவாங்க, மின் இணைப்பை துண்டித்த லைன்மேனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்ட தலைநகர் பார்வதிபுரத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் பாப்பையா. இவர் பார்வதிபுரத்தில் உள்ள ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மின்வாரிய ஊழியர் உமா என்பவர் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்து விதியை மீறியதால் காவல் ஆய்வாளரான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் விபத்து: அமெரிக்க வீரர்கள் மூவர் பலி, 20 பேர் காயம்

  • August 27, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்வில்லே தீவில் டார்வின் என்ற பகுதியில் இருந்து திவி என்ற தீவு பகுதியை நோக்கி அமெரிக்க கடற்படையை சேர்ந்த 2 ஆஸ்பிரே விமானங்கள் புறப்பட்டன. அதில் 23 கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இன்று காலை 9.30 மணியளவில் திடீரென அவர்களின் விமானத்தில் ஒன்று விபத்திற்குள்ளானது. எம்.வி.-22பி ஆஸ்பிரே ரக விமானத்தில் பயணம் செய்த வீரர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இதில், அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 20 […]

இலங்கை

கொத்மலை நீர்த்தேகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

  • August 27, 2023
  • 0 Comments

தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்குமிஸ் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அதே தோட்டத்தில் வசிக்கும் மேலும் இரு இளைஞர்களுடன் வால்ட்ரிம் தோட்டத்திற்குச் சொந்தமான காப்புக்காட்டில் மரம் வெட்டச் சென்றுள்ளதுடன், பின்னர் அனைவரும் ஒன்றாக நீராடுவதற்காக ஓடையில் இறங்கியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அங்கு நீராடிக் கொண்டிருந்த […]

உலகம்

ப்ரிகோஜின் மரணம்: வெளியான மரபணு சோதனை! ரஷ்யா வெளியிட்ட தகவல்

ப்ரிகோஜின் விமான விபத்தில் இறந்ததை மரபணு சோதனைகள் உறுதி செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது கடந்த புதன்கிழமை விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேரில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என்பதை மரபணு சோதனைகள் உறுதிப்படுத்தியதாக ரஷ்ய ஆய்வாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் பகுதியில் விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் இருந்த 10 பேரின் பெயர்களை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் முன்பு வெளியிட்டிருந்தது. அவர்களில் ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் […]

பொழுதுபோக்கு

“தமிழும் சரஸ்வதியும்” தொடரின் முக்கிய தருணம்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை….

  • August 27, 2023
  • 0 Comments

திரைப்படங்கள், வெப்சீரிஸ் போலவே சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்பொது முக்கிய கட்டத்தில் உள்ளது. அதற்கான புரொமோ வெளியாகியுள்ளது. தங்கையின் கணவனான தன்னை (அர்ஜுனை) தமிழ் கொலை செய்ய கத்தியால் குத்தியதாக நாடகமாடி தமிழ், மற்றும் சரஸ்வதியை ஸ்கெச் போட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிய அர்ஜுன், கோதை குடும்பத்தை பிரித்த சந்தேஷத்தில் வலம்வந்தார். ஆனால் இந்த சந்தோஷம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. அர்ஜுன் […]

ஐரோப்பா

பாடசாலை கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவுள்ள இம்மானுவேல் மக்ரோன்

  • August 27, 2023
  • 0 Comments

பிரான்ஸிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கோடைக்கால விடுமுறையின் பின்னர் நாடு திரும்பிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடகமொன்றுக்கு கருத்து வழங்கியபோதே இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் குறித்த அறிவிப்பானது ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்களிடையே விவாதத்தை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்வி நடவடிக்கையில் பின்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட மாணவர்கள் செப்டெம்பர் மாதம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பாடசாலைகளுக்கு […]

இலங்கை

யாழில் ஒரே தடவையில் பிறந்த மூன்று பிள்ளைகள் (புகைப்படம்)

  • August 27, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகம்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

  • August 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடாவில் வெள்ளையர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர். இனவெறியின் அடிப்படையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது வெள்ளையர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தில் உள்ள கறுப்பின பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேவேளை அமெரிக்காவில் இந்த ஆண்டில் […]

இலங்கை

நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

திருகோணமலை -தெவனிபியவர பகுதியில் 47 வயதுடைய நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது உடைய இளைஞரொருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் […]

error: Content is protected !!