இந்தியா

ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்த பொலிஸ்.. ஆத்திரத்தில் லைன்மேன் செய்த செயல்!

இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த பொலிஸை பழிவாங்க, மின் இணைப்பை துண்டித்த லைன்மேனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்ட தலைநகர் பார்வதிபுரத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் பாப்பையா. இவர் பார்வதிபுரத்தில் உள்ள ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக மின்வாரிய ஊழியர் உமா என்பவர் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்து விதியை மீறியதால் காவல் ஆய்வாளரான பாப்பையா மின்வாரிய ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்தார்.

இதனால், ஆவேசமடைந்த மின்வாரிய ஊழியரான உமா பார்வதிபுரத்தில் உள்ள பொலிஸ் உதவி மையத்திற்கு சென்று நான் யார் தெரியுமா, எனக்கு அபராதம் போடுறீங்களா என்று சத்தமாக பேசியுள்ளார்.பின்பு, பொலிஸ் உதவி மையத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனே, தகவலறிந்த பொலிஸார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை சரிசெய்தனர். மேலும், இது தொடர்பாக உமாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content